Friday, December 6, 2013

வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவர் – உண்மை நிகழ்வு

vaidhyanaadhar vaitheeswaran kovil

bairavar statueஸ்ரீ காலபைரவர் பெருமான்

 

வழிபாடு செய்யக்கூடிய 25 சிவ வடிவங்களில் பைரவரும் ஒருவர்.  பைரவரின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  காலத்ததை வென்ற தெய்வங்கள் பதிவில் காளி மற்றும் காலபைரவரின் பெருமைகளை ஆன்மீகச்சுடர் பதிவாக வெளியிட்டுருந்தது.  அதனை படித்து பயன் பெற்ற ஒரு வாசகியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தினை பைரவரின் பெருமையினை உலகறிய செய்யும் பொருட்டு ஒரு பதிவாக  வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

 

நாம் மேலே குறிப்பிட்ட அந்த வாசகி வெளிநாட்டினை சேர்ந்தவர்.  அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உண்டு.  அதில் இரண்டாவது குழந்தை பிறந்து சுமார் 7 மாதங்கள் ஆகிறது.  அக்குழந்தைக்கு இரண்டாவது மாதத்திலிருந்து சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது.  மிகச்சிறந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இருவரிடம் குழந்தைக்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள்.  மருத்துவர்கள் எவ்வளவோ மருந்துகளை தந்திருக்கிறார்கள்.  குழந்தைக்கு அவற்றினை அளித்திருக்கிறார்கள்.

 

ஆனால் சளி மற்றும் இருமலின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.  அந்த வாசகி நமது வலைப்பூவில் காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும் பதிவில் கூறப்பட்டதை படித்திருக்கிறார்.  அந்த தகவல் இதோ…

 

காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன.  இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார்.  பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.

 

ஒரு நாள் இரவு சுமார் 11 மணியளவில் குழந்தைக்கு சளி மற்றும் இருமல் அதிகமாகி இருக்கிறது.  அப்போது அந்த வாசகி மேற்கண்டவாறு காலபைரவரை மனதார நினைத்து தாம் இனி ஒரு போதும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் தனது குழந்தையை நோயிலிருந்து காப்பாற்று மாறும் வேண்டியிருக்கிறார்.  அவர் வேண்டிய 10 நிமிடங்களில் காலபைரவரின் அருளால் அக்குழந்தை குணம் பெற்றது.  அப்போது சரியான சளியும், இருமலும் திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  அந்த வாசகி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இந்த நிகழ்வில் காலபைரவர் பெருமான் சக்தி மிகுந்த மனோ பைரவராகவும், வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவராகவும் வந்திருக்கிறார்.

 

ஒரே ஒரு முறை மனதில் நினைத்தவுடனே வந்து வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவரின் அருளினை என்னவென்று சொல்வது…?  நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.  எல்லாம் அவன் செயல்.  அந்த வாசகி இந்த நிகழ்வினை மின்னஞ்சலில் தெரிவித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வு பைரவர் வழிபாட்டின் எளிமையையும், ஆற்றலையும் உணர்த்துகிறது.  இந்நிகழ்வு பைரவரின் அளவிலா கருணை உள்ளத்தையும், அந்த வாசகியின் உயர்ந்த பக்தியையுமே காட்டுகிறது.

 

இந்த நிகழ்வு அந்த வாசகியின் அனுமதி பெற்றே பதிவாக வெளியிடப் படுகிறது.  அவரது விருப்பப்படி அவரது பெயர் மற்றும் வசிக்கும் நாடு இவற்றை வெளிவிடப்பட வில்லை.  அவருக்கு ஆன்மீகச்சுடர் வலைப்பூ தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

காலத்தினை வென்ற தெய்வமான காலபைரவருக்கு கோடான கோடி நன்றிகளும்…! வணக்கங்களும்….!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

 

 

No comments:

Post a Comment