Showing posts with label திருவண்ணாமலை. Show all posts
Showing posts with label திருவண்ணாமலை. Show all posts

Sunday, January 25, 2015

பித்ரு வழிபாடு கேள்வி - பதில்

lor18d

1. ஒவ்வொரு மனிதனும் கட்டாயம் செய்ய வேண்டிய வழிபாடு எது?

பித்ரு வழிபாடு

2. பித்ரு வழிபாடு என்றால் என்ன?

இறந்த நம் முன்னோர்களை வழிபாடு செய்வதே பித்ரு வழிபாடு ஆகும்.

3. பித்ரு வழிபாடு செய்வதன் முக்கியத்துவம் என்ன?

எல்லா வழிபாடுகளுக்கும் முதன்மையானது பித்ரு வழிபாடு ஆகும்.  பித்ரு வழிபாடு முடிந்த பின்னரே மற்ற வழிபாடுகள் நடைபெற வேண்டும்.

4. பித்ரு வழிபாட்டை ஏன் செய்ய வேண்டும்?

நம் நலனில் அக்கறை கொண்ட பித்ருக்கள் பசியில்லாமல் ஒளியுலகில் இன்புற்றிருக்க பித்ரு வழிபாடு கட்டாயம் செய்ய வேண்டும்.

5. பித்ரு வழிபாட்டை யாரெல்லாம் செய்யலாம்?

இனம், மதம், மொழி, சாதி வேறுபாடு இல்லாமல் யார் வேண்டுமானாலும் பித்ரு வழிபாடு செய்யலாம்.

6. பித்ரு வழிபாட்டை தந்தை உயிரோடு இருக்கும் போது செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். இறந்த முன்னோர்கள் தன் பசியாற நம்மை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். உதாரணமாக நம் தாத்தா அவரது மகன் உணவளித்தால் தான் சாப்பிடுவாரா? இல்லையே. அவரது பேரப்பிள்ளைகள் நாம் உணவளித்தாலும் சாப்பிடுவார்.

7. பித்ரு வழிபாட்டை பெண்கள் செய்யலாமா?

தாராளமாக செய்யலாம். அமாவாசை முடிவதற்குள் ராமன் பித்ரு வழிபாடு செய்ய இயலவில்லை. அதற்குள் சீதாதேவி பித்ரு வழிபாட்டை செய்து முடித்தார். ராமன் மீண்டும் பித்ரு வழிபாடு செய்ய தொடங்க தசரதர் அசரீரீயாக தாம் சீதாதேவி கொடுத்த எள் நீரால் பசியாறி விட்டதாக கூறினாராம்.  இதனை ராமாயணம் உறுதி கூறுகிறது.

8. பித்ரு வழிபாட்டை எங்கே செய்வது சிறப்பு?

கோவில்கள், நதிக்கரைகள், குளக்கரைகள், கடற்கரைகள், புண்ணிய தீர்த்தங்கள், ஜீவ சமாதிகள் ஆகிய இடங்களில் செய்யலாம்.

9. பித்ரு வழிபாட்டை செய்ய சிறப்பான இடம் எது?

இவ்வுலகில் பித்ரு வழிபாடு செய்ய எத்தனையோ இடங்கள் இருப்பினும் திருவண்ணாமலையில் செய்யும் பித்ரு வழிபாடு 1000 மடங்கு பலன் தரக்கூடியது. பித்ரு வழிபாடு செய்ய திருவண்ணாமலையை விட சிறந்த இடம் உலகில் இல்லை.  அண்ணாமலையாரே வல்லாள மகாராசருக்கு பித்ரு கடன் தீர்த்த இடமான பள்ளிகொண்டாப்பட்டு (திருவண்ணாமலையிலிருந்து 5 கிமீ தொலைவில்) என்னும் ஊர் மிகவும் சிறப்பானது. அண்ணாமலையாரே பித்ரு கடன் தீர்த்த இடத்தை விட சிறப்பான இடம் உலகில் இருக்க முடியாது. இது அகத்தியர் வாக்கு.

10. பித்ரு வழிபாட்டை எப்போது செய்யலாம்?

மாதப்பிறப்பு, அயன பிறப்பு, வருடப்பிறப்பு, கிரகண காலங்கள், அமாவாசை திதி ஆகிய காலங்களில் பித்ரு வழிபாட்டை செய்யலாம். கோவில் தலங்களில் செய்யும் பொது எப்போது வேண்டுமானாலும் செய்யலாம். கோவில் தலங்களுக்கு காலவரையறை இல்லை.

11. பித்ரு வழிபாட்டில் இடம் பெற வேண்டிய பொருட்கள் யாவை?

தர்ப்பை, சுத்தமான நீர், கருப்பு எள் (ஆண்களுக்கு), வெள்ளை எள் (பெண்களுக்கு), ருத்திராட்சம், சங்கு ஆகியன.

12. பித்ரு வழிபாட்டில் எந்த மந்திரங்களை பயன்படுத்த வேண்டும்?

வடமொழி அல்லது தமிழ் மந்திரங்களை பயன்படுத்தலாம். தமிழ் மந்திரங்கள் மிகவும் சிறப்பானவை. ஏனெனில் தமிழே மந்திரமொழி ஆகும்.

13. பித்ரு வழிபாடு முடிந்தவுடன் செய்ய வேண்டிய முக்கிய செயல் என்ன?

அன்னதானம் செய்ய வேண்டும்.

14. பித்ரு வழிபாட்டின் பயன்கள் யாவை?

திருமணம், வேலை கிடைத்தல், குழந்தை பாக்கியம், செல்வ செழிப்பு, குடும்ப முன்னேற்றம் இன்னும் பல.

15. பித்ரு வழிபாடு செய்யாவிடில் ஏற்படும் துன்பங்கள் யாவை?

பித்ரு தோஷம் மற்றும் பித்ரு சாபம் உண்டாகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!

ஓம் றீங் அண்ணாமலையே போற்றி…!!!

Thursday, January 1, 2015

2015 ம் ஆண்டு வளர்பிறை துவாதசி திதி வரும் நாட்கள்

annadhaanam

Valarpirai Dwadhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, January 5, 2014

2014 ம் வருட பௌர்ணமி வரும் நாட்கள்

https://fbcdn-sphotos-a-a.akamaihd.net/hphotos-ak-ash2/251293_10151434060483835_1728852201_n.jpg

Pournami - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, November 21, 2013

சிவபெருமானின் திருப்பெயர்கள் – திருவாதிரை சிறப்பு பதிவு

image SIVA 1000_Page_01SIVA 1000_Page_02SIVA 1000_Page_03SIVA 1000_Page_04SIVA 1000_Page_05SIVA 1000_Page_06SIVA 1000_Page_07SIVA 1000_Page_08SIVA 1000_Page_09SIVA 1000_Page_10SIVA 1000_Page_11SIVA 1000_Page_12SIVA 1000_Page_13SIVA 1000_Page_14SIVA 1000_Page_15SIVA 1000_Page_16SIVA 1000_Page_17SIVA 1000_Page_18

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Sunday, November 17, 2013

கர்மவினை நீக்கும் தீபங்கள் - தீப திருநாள் சிறப்பு பதிவு

image

அண்ணாமலையார் பாதம்

image

திருஅண்ணாமலை

image

தீபம் ஏற்றுவதற்கு முன்

image

தீபம் ஏற்றிய பின்

image

கோபுரங்களுக்கிடையே மலைமேல் தீபம்

image 

மலைமேல் தீபம்

 

தீபங்கள் நமது கர்மவினைகளை நீக்கக்கூடியவை.  சிவத்தலத்தில் ஏற்றப்படும் தீபத்திற்கு பாவங்களை போக்கும் சக்தி உண்டு.  தீபங்கள் தீய சக்திகளை அண்டாத வண்ணம் காக்கக்கூடியவை.  வேண்டும் பலனைத் தரக்கூடியவை.  சிவத்தலத்தில் தீபம் ஏற்றுபவரும், ஏற்ற உதவியவரும் சிவ லோக பதவி அடைவார்கள் என்பது திண்ணம்.  தொடர்ந்து தீபம் ஏற்றியவர்களின் பரம்பரையில் யாருக்கும் கண்பார்வை குறைபாடு வராது.  மிகுந்த புண்ணியம் சேரும்.  சிவன் சந்நிதியில் அணைய இருந்த தீபத்தை தன்னை அறியாமல் தூண்டி விட்ட எலி மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்தது என்றால் தீபத்தின் பெருமையினை நாம் உணரலாம்.

 

இன்று திருக்கார்த்திகை திருநாள்.  இன்று அவரவர் இல்லங்கள் தோறும் தீபம் ஏற்றி எல்லாம் வல்ல அண்ணாமலையார் அருளை பெறலாம்.  இன்று ஏற்றப்படும் தீபம் சிவபெருமானின் வடிவம் ஆகும்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் சிவபெருமானை தீப வடிவில் வழிபடும் நாள் இந்த கார்த்திகை தீபத்திருநாள்.  தீபங்களின் மகிமை பற்றிய சிறு கணக்கு இதோ.

 

1000 நெய் தீபங்கள் = 1 தேங்காய் எண்ணெய் தீபம்

1000 தேங்காய் எண்ணெய் தீபங்கள் = 1 நல்லெண்ணெய் தீபம்

1000 நல்லெண்ணெய் தீபங்கள் = 1 விளக்கெண்ணெய் தீபம்

1000 விளக்கெண்ணெய் தீபங்கள் = 1 வேப்பெண்ணெய் தீபம்

1000 வேப்பெண்ணெய் தீபங்கள் = 1 இலுப்பெண்ணெய் தீபம்

 

ஒவ்வொரு தீபமும் நம் வாழ்வில் ஒளி ஏற்றட்டும்.  தீபங்களை ஏற்றி அனைத்து கர்மவினைகளை நீக்கி சிவனருள் பெற்று இனிதுடன் வாழ்வோம்.  தீபத்திருநாளில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ அண்ணாமலையாரின் பாதம் பணிந்து இப்பதிவினை வெளிவிடுவதில் பெருமை கொள்கிறது.

 

தீபத்திருநாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் அண்ணாமலையார் பாதங்களில் இப்பதிவு சிறு காணிக்கையாக செலுத்தப்படுகிறது.

தீபம்

கார்த்திகை தீபம்

அகர தீபமோ குகநாதம்

உகர தீபமோ கணநாதம்

மகர தீபமோ பூதநாதம்

மகா தீபமோ சிவ நாதம்

அகார – உகார – மகார வடிவான ஓங்கார தீபம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

திருச்சிற்றம்பலம்…! – பொன்னம்பலம்…!! – அருணாச்சலம்…!!!

 

Friday, November 15, 2013

விஜய வருட (2013 - 2014) பௌர்ணமி வரும் நாட்கள்

arunaasalam.jpg.pagespeed.ce.kWk80reaP_
Pournami
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

Wednesday, October 30, 2013

திருவாதிரை கிரிவல நாட்கள் – திருத்திய பதிவு

நந்தன – விஜய வருட திருவாதிரை கிரிவல நாட்கள்:

 

16.4.2013 செவ்வாய்க்கிழமைக்கிழமை காலை 9 மணி 34 நிமி 52 வி முதல் 17.4.2013 புதன்கிழமை கிழமை மதியம் 12 மணி 34 நிமி 18 வி வரை

 

13.5.2013 திங்கட்கிழமை கிழமை மாலை 4 மணி 43 நிமி 12 வி முதல் 14.5.2013 செவ்வாய்க்கிழமை மாலை 7 மணி 45 நிமி 48 வி வரை

 

9.6.2013 ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணி 2 நிமி 37 வி முதல் 11.6.2013 செவ்வாய்கிழமை இரவு 2 மணி 5 நிமி 10 வி வரை

 

7.7.2013 ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 5 மணி 0 நிமி 3 வி முதல் 8.7.2013 திங்கட்கிழமை காலை 8 மணி 1 நிமி 12 வி வரை (7.7.2013 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 22 நிமி 31 வி முதல் 8.7.2013 திங்கட்கிழமை இரவு 12 மணி 47 நிமி 49 வி வரை அமாவாசை திதியும் சேர்ந்தே வருகிறது)

 

3.8.2013 சனிக்கிழமை மதியம் 11 மணி 16 நிமி 17 வி முதல் 4.8.2013 ஞாயிற்றுக்கிழமை மாலை மதியம் 2 மணி 15 நிமி 52 வி வரை (2.8.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 36 நிமி முதல் 3.6.2013 சனிக்கிழமை இரவு 9 மணி 6 நிமி 49 வி வரை துவாதசி திதியும் சேர்ந்தே வருகிறது)

 

30.8.2013 வெள்ளிக்கிழமை மாலை 6 மணி 20 நிமி 33 வி முதல் 31.8.2013 சனிக்கிழமை இரவு 9 மணி 19 நிமி 5 வி வரை

 

27.9.2013 வெள்ளிக்கிழமை இரவு 2 மணி 12 நிமி 39 வி முதல் 28.9.2013 சனிக்கிழமை அதிகாலை 5 மணி 9 நிமி 51 வி வரை

 

24.10.2013 வியாழக்கிழமை காலை 10 மணி 22 நிமி 56 வி முதல் 25.10.2013 வெள்ளிக்கிழமை மதியம் 1 மணி 16 நிமி 58 வி வரை

 

20.11.2013 புதன்கிழமை மாலை 6 மணி 9 நிமி 33 வி முதல் 21.11.2013 வியாழக்கிழமை இரவு 8 மணி 59 நிமி 21 வி வரை

 

18.12.2013 புதன்கிழமை நள்ளிரவு 1 மணி 4 நிமி 10 வி முதல் 19.12.2013 வியாழக்கிழமை நள்ளிரவு 3 மணி 53 நிமி 10 வி வரை

 

14.1.2014 செவ்வாய்க்கிழமை காலை 7 மணி 13 நிமி 19 வி முதல் 15.1.2014 புதன்கிழமை காலை 10 மணி 7 நிமி 25 வி வரை

 

10.2.2014 திங்கட்கிழமை மதியம் 1 மணி 21 நிமி 22 வி முதல் 11.2.2014 செவ்வாய்க்கிழமை மாலை 4 மணி 19 நிமி 47 வி வரை

 

9.3.2014 ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணி 21 நிமி 31 வி முதல் 10.3.2014 திங்கட்கிழமை இரவு 11 மணி 13 நிமி 18 வி வரை

 

6.4.2014 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி 7 நிமி 32 வி முதல் 7.4.2014 திங்கட்கிழமை காலை 7 மணி 2 நிமி 45 வி வரை

 

இது தவிர, இந்த வருடத்தில் வர இருக்கும் சனிக்கிழமைப்பிரதோஷ நாட்கள் வருமாறு:

20.7.2013

30.11.2013

14.12.2013

12.4.2014

 

விஜய வருடத்தில் வர இருக்கும் சோம வார(திங்கட்கிழமை) பிரதோஷ நாட்கள் வருமாறு:

2.9.2013

30.12.2013

 

தொலை தூரத்தில் வாழ்ந்து வருபவர்கள் இந்த பட்டியலில் குறிப்பிடப்பட்டிருக்கும் அமாவாசை அல்லது பவுர்ணமி வரும் திருவாதிரை நாளில் கிரிவலம் வந்தாலே போதுமானது.  தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் குறைந்தது ஆறு திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலைகிரிவலம் செல்வது அவசியம்.  இனி ஒரு போதும் மனிதப்பிறவி எடுக்கவே கூடாது என்ற சங்கல்பம் உடையவர்கள் தொடர்ந்து திருவாதிரை கிரிவலம் சென்றாலே போதும்.  பவுர்ணமி கிரிவலத்தை விடவும்பல கோடி மடங்கு உயர்ந்தது இந்த திருவாதிரை கிரிவலம் ஆகும்.  சிவ கணம் ஆக விரும்புவோர், நமது கர்மவினைகளையும், நமது முன்னோர்களின் கர்மவினைகளையும் இந்த ஜன்மத்திலேயே கரைத்து, பரிபூரணமான புண்ணிய ஆத்மாவாக்கிட விரும்புவோர் இந்த பட்டியலைப் பின்பற்றி அண்ணாமலை கிரிவலம் செல்வது நன்று.  வேறு எதுவும் செய்ய வேண்டியதில்லை (முடிந்தால், இந்த கிரிவலத்தோடு சேர்ந்து அன்னதானமும் பல கோடி மடங்கு புண்ணியத்தை தரும்)

குறிப்பு: முன்பு வெளியிடப்பட்ட பதிவிலும் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் சிவ சிவ ஓம்

ஓம் சிவ சக்தி ஓம்

Saturday, October 5, 2013

திருவண்ணாமலையின் வேறு பெயர்கள்










  1.     
அண்ணாமலை
  2.     
அருணாசலம்
  3.     
சிவலோகம்
  4.     
தென்கயிலாயம்
  5.     
சோணகிரி
  6.     
ஞான நகரம்
  7.     
தேசு நகரம்
  8.     
கௌரி நகரம்
  9.     
தலேச்சுரம்
 10.    
சுத்த நகரம்
 11.    
வாயு நகரம்
 12.    
ஆதிமலை
 13.    
அக்கினிமலை
 14.    
நீலமலை
 15.    
வெள்ளிமலை
 16.    
ஐந்துவண்ணமலை
 17.    
மருந்துமலை
 18.    
ஐந்து முகமலை
 19.    
பொன்மலை
 20.    
மாணிக்கமலை






தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்