தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் அகத்தீசாய நமஹ
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
அகத்தியரை அறியாத தமிழர்களே இல்லை எனலாம். என்றும் இனிய தமிழ் மொழிக்கு இலக்கணம் வகுத்தவர். சித்த மருத்துவத்தின் பிதாமகர் இவரே. சித்தர்களின் தலைவரும் இவரே. முக்காலமும் உணர்ந்த இவரின் பெருமைகளை பற்றி நமது வலைப்பூவில் ஏற்கனவே ஒரு பதிவு வெளி வந்துள்ளது.
எல்லாம் வல்ல அகத்தியர் பெருமான் அவதாரம் செய்த மார்கழி மாதம் ஆயில்யம் நட்சத்திரம் வரும் 21.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 9 மணி 47 நிமி 25 வி முதல் 22.12.2014 அன்று இந்திய நேரப்படி மதியம் 12 மணி 41 நிமி 12 வி வரை வருகிறது.
இந்த சிறப்பு வாய்ந்த மார்கழி ஆயில்யம் நட்சத்திர நாளில் அருகில் இருக்கும் அகத்தியர் ஆலயத்திற்கு சென்று எல்லாம் வல்ல அகத்தியர் பெருமானை வழிபட்டால் எல்லா வித இன்னல்களும் நீங்கி எல்லா வித பேறுகளையும் பெறுவர் என்பது திண்ணம். அகத்தியரின் ஆலயம் கிடைக்காவிடில் அகத்தியர் பெருமானின் திருவுருவப்படத்தினை வைத்து வீட்டிலேயே வழிபாடு செய்யலாம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த நாளில் அகத்தியரின் வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்கலாம். அவ்வாறு இயலாவிடில் ஒவ்வொரு மாதமும் ஆயில்யம் நட்சத்திரம் வரும் நாளில் அகத்தியர் பெருமானை வழிபாடு செய்யலாம். அகத்தியரை வழிபடும் முறைப் பற்றி ஏற்கனவே வந்த பதிவில் கூறப்பட்டுள்ளது.
வழிபாடு செய்யும் நேரம் அதாவது கும்ப லக்கினம் 21.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 10 மணி 11 நிமி 33 முதல் காலை 11 மணி 53 நிமி 31 வி வரையிலும், 22.12.2013 அன்று இந்திய நேரப்படி காலை 10 மணி 7 நிமி 37 வி முதல் காலை 11 மணி 49 நிமி 35 வி வரையிலும் வருகிறது.
இந்த பொன்னான தருணத்தில் “ஓம் அகத்தீசாய நமஹ” செபிக்க ஆரம்பிக்கலாம் அல்லது எழுத ஆரம்பிக்கலாம். இது வரை செபித்து வந்தவர்கள் அல்லது வழிபாடு செய்து வந்தவர்கள் அல்லது எழுதி வந்தவர்கள் நடுவில் செபிக்காமலோ அல்லது வழிபாடு செய்யாமலோ அல்லது எழுதாமலோ தடைகள் ஏற்பட்டிருக்கலாம். இவ்வாறு தடையினால் நடுவில் நிறுத்தியவர்கள் இந்த பொன்னான நேரத்தில் மீண்டும் தொடரலாம்.
மேற்கண்ட நேரத்தில் செய்யும் அகத்தியர் வழிபாடு மிகுந்த பலனை கொடுக்கும். அகத்தியரை வழிபாடு செய்வதால் ஏற்படும் பலன்களைப் பற்றி விரிவாக ஏற்கனவே வந்த பதிவில் கூறப்பட்டுள்ளது. எனவே நாம் அனைவரும் மேற்கண்ட பொன்னான நேரத்தில் அகத்தியர் பெருமானை வழிபட்டு நமது கர்ம வினைகளை கரைத்து அவரது அன்பிற்கு பாத்திரமாவோம்.
அகத்தியர் வழிபாடு செய்ய உகந்த நட்சத்திரமான ஆயில்யம் வரும் நாட்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளி வரும்.
இப்பதிவினை எழுத தூண்டிய கொல்லிமலையில் வாசம் செய்யும் அகத்தியரின் சீடர் போகர் சித்தரின் பாதங்கள் பணிந்து இப்பதிவினை அகத்தியர் பெருமான் பாதங்களில் சமர்ப்பிக்கிறேன்.
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் ஸ்ரீம் அகத்திய முனிவரே போற்றி
ஓம் போக சித்தாய நமஹ
ஓம் சிவ சிவ ஓம்