Showing posts with label சக்தி கணபதி. Show all posts
Showing posts with label சக்தி கணபதி. Show all posts

Friday, January 9, 2015

2015 ம் ஆண்டு சங்கடஹர சதுர்த்தி வரும் நாட்கள்

Ganesha-Gives-Blessings

Sankadahara Chadhurthi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் கம் கணபதயே நமஹ

Sunday, March 2, 2014

எந்தெந்த தெய்வங்களை வீட்டில் வைத்து வணங்கலாம்?

Nataraja-Sivagamasundari-nalvar-Screen

பொதுவாக கடவுள் வழிபாட்டில் உருவ வழிபாடு மிக முக்கியமானது.  உருவ வழிபாடே மக்களின் மனதை கடவுளிடம் ஒன்றுமாறு செய்யக்கூடியதாகும்.  இத்தகைய உருவ வழிபாட்டில் பிம்பங்களை அதாவது படங்களை வைத்து வழிபாடு செய்வதும் அடங்கும்.  அவ்வாறு படங்களை வைத்து வழிபாடு செய்வதில் சில விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்.  இல்லையேல் நமது வாழ்வில் குழப்பங்கள் உண்டாகும்.  எனவே குழப்பங்களை தவிர்த்து இறை வழிபாடு தழைக்கவே இப்பதிவு எழுத வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

வீட்டில் வைத்து வணங்க வேண்டிய கடவுள்கள் / தெய்வங்கள் /  தேவதைகள்:-

  • அவரவர் குல தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இது மிகவும் நன்மை பயக்கும்.  குல தெய்வம் நம்மை கண்ணின் இமை போல் காத்து நிற்கும்.  குல தெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் உலகில் இல்லை.  குல தெய்வத்தின் அருள் இல்லாமல் நாம் வாழவே இயலாது.
  • அவரவர் இஷ்ட தெய்வத்தின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  இதுவும் நன்மை பயக்கும்.  நமது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றி நம்மை காப்பாற்றும் தெய்வம் இஷ்ட தெய்வமே.  குல தெய்வத்திற்கு அடுத்தபடியாக நமக்கு அருள் பாலிக்கும் தெய்வம் இஷ்ட தெய்வமே. 
  • எந்த ஒரு விநாயகர் படத்தினையும் வைத்து வணங்கி வரலாம்.  முழு முதற் கடவுள் இவரே.  இவரை வழிபடுவதால் நம் வாழ்வில் அனைத்து நலங்களையும் பெறலாம்.  காரியசித்தி உண்டாக்குபவர் இவரே.  விக்கினங்களையும், வினைகளை களைபவரும் இவரே.  நல்வழி காட்டுபவரும் இவரே.
  • குழந்தை கடவுளரின் படம் எதுவாக இருந்தாலும் வைத்து வணங்கி வரலாம்.  இது குழந்தை வரம் தரும்.  குழந்தை இல்லாதவர்கள் வழிபாடு செய்ய வேண்டியது மிகவும் அவசியம்.  நல்ல குழந்தைகள் பிறக்கும்.  பிறந்த குழந்தைகளின் வாழ்வில் முன்னேற்றம் உண்டாகும்.
  • ராஜ அலங்கார முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  அரசாங்க காரியங்களில் வெற்றி பெறவும், அரசு வேலைக்கு முயற்சிப்பவர்களும்,  அரசியலில் முன்னேற துடிப்பவர்களும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  இவரின் அருள் இல்லாமல் அரசியலும் இல்லை, அரசாங்கமும் இல்லை.
  • மணக்கோலத்தில் இருக்கும் முருகரின் படத்தினை வைத்து வணங்கி வரலாம்.  திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்தடையை போக்கும் வடிவம் ஆகும்.  திருமணம் ஆனவர்களின் வாழ்வில் மகிழ்ச்சியை பொங்க செய்யும் வடிவம் இதுவே ஆகும்.  இல்லறம் நல்லறமாக நடக்கும்.
  • அர்த்தநாரீஸ்வரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  நாம்  அனைவரும் வணங்க வேண்டிய கடவுள் இவரே.  பிரிந்த தம்பதியர் வணங்கி வந்தால் விரைவில் ஒன்று சேருவர்.  தம்பதியரின் திருமண வாழ்வில் ஒற்றுமை, அன்பு, காதல், பாசம் உண்டாகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமை நீங்கும்.
  • சக்தியுடன் இருக்கும் சிவபெருமானின் படத்தினை வணங்கி வரலாம்.   சிவசக்தி கலப்பே உலகம்.  சிவசக்தி கலப்பில்லாமல் உலகில்லை.  சக்தியுடன் இருக்கும் சிவபெருமானுக்கே மிகவும் வலிமை அதிகம்.  எப்போதும் எல்லோருக்கும் எல்லாவற்றையும் வழங்கும் வடிவம் சிவசக்தி வடிவம் ஆகும்.
  • ராதையுடன் இருக்கும் குழலூதும் கிருஷ்ணரின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இது திருமணத்தடையை நீக்கும் வடிவம் ஆகும்.  இந்த வடிவம் தம்பதியர் இடையே அன்பு, பாசம், காதல், நேசம் இவற்றை உருவாக்கும் வடிவம் ஆகும்.  தம்பதியரின் கருத்து வேற்றுமையை நீக்கும் வடிவம் ஆகும்.
  • குடும்பத்துடன் இருக்கும் சிவபெருமானின் படம் வைத்து வணங்கி வரலாம்.  இதுவே எல்லா வடிவங்களைக் காட்டிலும் மிகவும் சிறந்தது.  இதனை வைத்து வணங்கி வர குடும்பத்தில் ஒற்றுமையும், அமைதியும் உண்டாகும்.  குடும்பம் ஒற்றுமையுடன் செழித்து வளரும்.
  • தனது மனைவியான சொர்ணதாதேவியை அணைத்தவாறு தன் மடியில் அமர்த்தி அருள்பாலிக்கும் சொர்ணபைரவரின் படமும் வீடுகளில் வைத்து வணங்கத் தக்கதே.  பைரவ வடிவங்களிலேயே சிறந்த இவ்வடிவத்தினை வணங்கி வர அறம், பொருள் மற்றும் இன்பம் அனைத்தும் பெருகும்.
  • ராமர், சீதை, லட்சுமணன் இவர்களுடன் கூடிய அனுமனின் படமும் சிறப்பானதே.  பஞ்சமுக அனுமன் கேட்ட வரங்களை எல்லாம் அள்ளித் தருபவர்.  அனுமனின் படம் வைத்தால் அதனுடன் ராமனின் படத்தையும் கட்டாயம் வைக்க வேண்டும்.
  • லட்சுமியுடன் கூடிய நாராயணனின் எந்த ஒரு அவதாரத்தையும் தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் திருமகளின் அருள் கிட்டும்.  நிம்மதியான வாழ்க்கையும் 16 வகை பேறுகளும் கிட்டும்.
  • சிவகாமசுந்தரியுடன் நடனமாடும் நடராசரை தாராளமாக வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இது சிவசக்தி அருளைத் தரும்.  16 பேறுகளும் கிட்டும்.  நடனம், இசை முதலான நுண்கலைகளில் புலமை உண்டாகும்.  கர்மவினைகள் தொலையும்.  மாயை விலகும்.  முக்தி கிட்டும்.
  • ஞானத்தினை போதிக்கும் தட்சணாமூர்த்தியின் படம் வீட்டில் வைத்து வணங்கி வழிபாடு செய்வது நன்று.  இதனால் அறிவும், ஞாபக சக்தியும் உண்டாகும்.  கல்வி ஞானம் கிட்டும்.  ஞாபக மறதி உடைய குழந்தைகள் வணங்க வேண்டிய வடிவம் இதுவே.  கல்வி, செல்வம், வீரம் மூன்றும் கிட்டும்.
  • கலைமகளின் படமும் வீட்டில் வைத்து வணங்கத் தக்கதே.  இதனால் குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களுக்கும் பேச்சுத்திறமையும், எழுத்துத்திறமையும் உண்டாகும்.  நமது வளமான வாழ்விற்கு வாணி வழிகாட்டுவாள்.  போட்டித் தேர்வுகளில் வெற்றி உண்டாகும்.
  • லட்சுமியின் எந்த ஒரு படமும் வீட்டில் இருக்கலாம்.  குபேரனுக்கு அருள் பாலிக்கும் லட்சுமி படமும், லட்சுமி மற்றும் குபேரன் இவர்கட்கு அருள் பாலிக்கும் சிவபெருமானின் படமும் மிகவும் சிறந்தவை.  இத்தகைய படங்களை வைத்து வணங்கி வர 16 பேறுகளும் கிட்டும். 8 ஐஸ்வர்யங்களும் உண்டாகும்.
  • அலர்மேல்மங்கைத் தாயாருடன் கூடிய வேங்கடேச பெருமாளின் படம் வீட்டில் வைத்து வணங்கி வரலாம்.  இதனால் செய்தொழிலில் நல்ல வருமானமும், சுகமான வாழ்க்கையும் அமையும்.  மேற்கண்ட படத்துடன் லட்சுமியின் படமும் இருப்பது மிகவும் சிறப்பானது.
  • துர்க்கையின் படம் வீட்டில் வைத்து வழிபாடு செய்வது மிகவும் சிறப்பானது.  இதனால் தீமைகள் அழிந்து நன்மைகள் பெருகும்.  கணவன் மற்றும் மனைவி இடையே ஒற்றுமை உண்டாகும்.  செய்யும் தொழிலில் மேன்மை உண்டாகும்.  வியாபாரம் பெருகும்.
  • அன்னம் பாலிக்கும் அன்னபூரணியின் படம் நாம் அவசியம் வீட்டில் வைத்து வழிபாடு செய்தல் மிகவும் சிறப்பானது.  இதன் மூலம் வறுமை அகலும்.  பசி, பட்டினி, பஞ்சம் தீரும்.  வேலையில்லாமல் இருப்பவர்களுக்கு கண்டிப்பாக வேலை கிடைக்கும்.
  • சித்தர்கள், மகான்கள், முனிவர்கள், யோகிகள், ரிஷிகள் இவர்களின் படங்களையும் வீட்டில் வைத்து வழிபாடு செய்யலாம்.  இதனால் குருவருள் வந்து சேரும்.  தோஷங்கள் விலகும்.  கர்மவினைகள் நீங்கி புண்ணியம் சேரும்.  வளமான, நிம்மதியான வாழ்க்கை கிட்டும்.

எமக்கு தெரிந்தவரை மேலே பட்டியலிட்டிருக்கிறேன்.  இதனை படிக்கும் ஆன்மீக அன்பர்களுக்கு வேறு தகவல்கள் தெரிந்திருப்பின் தவறாது கருத்துரையிலோ அல்லது மின்னஞ்சலிலோ தெரிவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.  நீங்கள் தெரிவிக்கும் தகவல்கள் இப்பதிவினை மேலும் மேம்படுத்த உதவும்.  நன்றி…!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, January 9, 2014

2014 ம் வருட வளர்பிறை சதுர்த்தி வரும் நாட்கள்

Ganesha-Gives-Blessings

Valarpirai Chadhurthi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Tuesday, January 7, 2014

2014 ம் வருட தேய்பிறை (சங்கடஹர) சதுர்த்தி வரும் நாட்கள்

ganesh

Sankadahara Chadhurthi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, October 17, 2013

குன்றாத செல்வம் தரும் சக்தி கணபதி

 

http://i2.wp.com/hindupad.com/wp-content/uploads/2012/08/Shakti-Ganapati.jpg?w=360

http://www.indianetzone.com/photos_gallery/61/Shakti%20Ganapati%20Form%20of%20Lord%20Ganesha.jpg

 

அலிங்கிய தேவீம் ஹரிதம் நிஷ்னாம்

பரஸ்பரா ஷ்லிஷ்டக தீ நிவேஷம்

சந்த்யா ருணம் பாஷஷ்ருணிம் வஹஸ்தம்

பயபஹம் சக்தி கணேச மீதே.

 

மேலே உள்ள படத்தில் நாம் காண்பது கணபதியின் உயரிய வடிவமான சக்தி கணபதி ஆகும்.  கணபதியின் பல்வேறு வடிவங்களில் இவர் தான் மிக மிக மிக சக்தி வாய்ந்தவர்.  இந்த வடிவம் தந்திர வழிபாட்டில் மட்டுமே காணப்படுகிறது.

 

இவர் பச்சைநிறமுடைய தனது சக்தியை (மனைவி) தனது இடது தொடை மீது அமர்த்தி இருப்பார்.  இவர் சூரிய மறையும் காலத்தில் உள்ள வானத்தின் இளஞ்சிவப்பான நிறமுடையவர்.  ஒரு கரத்தில் பாசத்தை உடையவர்.  மற்றொரு கரத்தில் பூங்கொத்தினை உடையவர்.  மற்றொரு கரத்தில் அபய முத்திரை காட்டுபவர்.  மற்றொரு கரத்தில் தனது மனைவியை அணைத்துக் மகிழ்ச்சியாக இருப்பவர்.

 

இந்த வடிவம் வட இந்தியாவில் மட்டுமே காணப்படுகிறது.  இவரின் பெருமையை அறிந்த முதலாம் குலோத்துங்க சோழன் இவரை தினமும் வழிபாடு செய்து வந்துள்ளான்.  முதலாம் குலோத்துங்க சோழன் வழிபாடு செய்த மூன்று முக்கிய தெய்வங்களில் இவரே மிகவும் முக்கியமானவர்.

 

முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் எப்போதும் போரும் அதில் வெற்றி மட்டுமே இருந்திருக்கிறது.  அவனது படைத்தலைவன் கருணாகர தொண்டைமான் சக்தி கணபதியை வணங்கியே போருக்கு சென்றிருக்கிறான். 

 

முதலாம் குலோத்துங்கனின் காலத்தில் அவனது நாட்டில் பஞ்சம் என்பதே இல்லாமல் இருந்திருக்கிறது.  நாடே செல்வ செழிப்புடன் இருந்திருக்கிறது.  ஒரு தடவை போர் நடத்தினாலே நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும்.  இருப்பினும் முதலாம் குலோத்துங்கன் தொடர்ந்து போர்களை நடத்தியும் அவனது குன்றாத செல்வத்திற்கு காரணம் அவனது சக்தி கணபதி வழிபாடு தான்.

 

முதலாம் குலோத்துங்கனின் கலிங்கத்து வெற்றியை கலிங்கத்துப்பரணி பாடுகிறது.  இந்த வெற்றிக்கு காரணம் அவன் செய்த மூன்று தெய்வங்களின் வழிபாடு தான் காரணமாக அமைந்திருக்கிறது. 

 

நாமும் இத்தகைய கணபதியின் உயரிய வடிவத்தினை தினமும் வழிபட்டு அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும், மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியையும் பெறுவோம்.

 

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்தி விட்டு இவரது வழிபாட்டை முதலில் சதுர்த்தி நாளில் தொடங்க வேண்டும்.  இவரது படத்தை அச்சிட்டு பூசை அறையில் வைத்துக் கொண்டு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் ஏற்றி வழிபாட்டினை துவக்கவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது விநாயகருக்கு பிடித்தமான பொருட்களை வைத்து துவக்கவும்.  பின்பு இரண்டு இலுப்பை எண்ணெய் தீபங்கள் மட்டுமே போதுமானது.

 

முதலில் விநாயகர் ஆலயத்தில் தேய்பிறை சதுர்த்தி அன்று மேற்கண்ட துதியை ஒரு முறை செபித்து பின்பு “ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ” என்று 108 முறை செபிக்க வேண்டும்.   பின்பு வீடு வந்து சக்தி கணபதி படத்தின் முன்பு 27 முறை செபிக்க வேண்டும்.  பிறகு தினமும் வீட்டில் 27 முறை செபித்தாலே போதுமானது. 

 

 இவரை வழிபாடு செய்வதால் அளப்பறிய செல்வமும், மனதில் நிம்மதியும், மனமகிழ்ச்சியும் உண்டாகும்.  செல்வத்திற்கு என்றும் குறைவு வராது.  மனதில் துணிவும், எக்காரியத்திலும் வெற்றியும் உண்டாகும்.

 

முதலாம் குலோத்துங்கன் வழிபட்ட மூன்று தெய்வங்களில் மற்ற இரண்டு தெய்வங்கள் பற்றி தனியாக பதிவுகள் வெளிவரும்.

 

ஓம் ஹ்ரீம் சக்தி கணபதயே நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Sunday, September 22, 2013

வேலை கிடைக்க வைக்கும் காரிய சித்தி மாலை - சங்கடஹர சதுர்த்தி பரிசு

http://www.srisiddhivinayak.com/Images/Stories/3.jpg 
http://www.indianetzone.com/photos_gallery/61/Shakti%20Ganapati%20Form%20of%20Lord%20Ganesha.jpg



பந்தம் அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை கூரத் தொழுகின்றோம்.


உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன்அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம். 


இடர்கள் முழுதும் எவனருளால் எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால் சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன் சரணம் அடைகின்றோம். 


மூர்த்தியாகித் தலமாகி முந்நீர் கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத் திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


செய்யும் வினையின் முதல்யாவன் செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில் ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப் புரிந்து சரணம் அடைகின்றோம்.


வேதம் அளந்தும் அறிவரிய விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும் விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்எவன் எண்குணன் எவன்அப்
போதமுதலைக் கணபதியைப் புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.


மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான் எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன்தீயின் மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான் எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை அன்பிற் சரணம் அடைகின்றோம். 


பாச அறிவில் பசுஅறிவில் பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப் பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத் திகழச் சரணம் அடைகின்றோம்.


நூற்பயன் 

 
இந்த நமது தோத்திரத்தை யாவன் மூன்று தினமும் உம்மைச்
சந்தி களில்தோத் திரஞ்செயினும் சகல கரும சித்திபெறும்
சிந்தை மகிழச் சுகம்பெறும்எண் தினம்உச் சரிக்கின் சதுர்த்தியிடைப்
பந்தம் அகல ஓர்எண்கால் படிக்கில் அட்ட சித்தியுறும். 


திங்கள் இரண்டு தினந்தோறும் திகழஒருபான் முறையோதில்
தங்கும் அரச வசியமாம் தயங்க இருபத் தொருமுறைமை
பொங்கும் உழுவ லால்கிளப்பின் பொருவின் மைந்தர் விழுக்கல்வி
துங்க வெறுக்கை முதற்பலவும் தோன்றும் எனச்செப் பினர் மறைந்தார்.


ஆக்கம்: காசிப முனிவர்

                                                தமிழில்: கச்சியப்பர்


இன்றைய உலகில் வேலை கிடைக்காமல் அவதிபடுவர்கள் எத்தனையோ பேர்.  வேலையில்லா திண்டாட்டம் பெருகி வரும் இந்நாளில் படிப்புக்கு ஏற்ற வேலை கிடைக்கவும், செய்யும் தொழிலில் இடர்கள் விலகவும், அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கவும் மேற்கண்ட விநாயகர் அஷ்டகம் என்னும் காரிய சித்தி மாலை பெரிதும் உதவும்.

வேலையில்லாமல் அவதிபடுபவர்கள் தங்கள் வீட்டிற்கு அருகில் உள்ள விநாயகர் கோவிலிலுள்ள விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அன்று சர்க்கரை சேர்க்காத பால் கோவா வாங்கி வந்து சந்தன காப்பு செய்வது போல் பால் கோவா காப்பு செய்து மேற்கண்ட அஷ்டகத்தை 1 முறை பாராயணம் செய்யவும்.  காப்பு செய்த பால் கோவாவில் பாதியை அங்கிருப்பவர்களுக்கு வழங்கவும்.

பின்பு வீட்டிற்கு வந்து சக்தி கணபதி படம் அல்லது விநாயகர் சிலை முன்பு 8 முறை பாராயணம் செய்து மீதி பால்கோவாவை வீட்டிலுள்ள அனைவருக்கும் வழங்கவும்.  இதை மூன்று சங்கடஹர சதுர்த்திகள் செய்யவும்.  கோவிலின் விநாயகர் சிலைக்கு ஏற்ப பால்கோவாவின் அளவை வாங்கிக் கொள்ளவும்.

90 நாட்களுக்கு வீட்டிலோ அல்லது வெளியிலோ அசைவம் சாப்பிடுவதை நிறுத்தவும்.  கண்டிப்பாக பலன் கிடைக்கும்.  

மேற்கண்ட படத்தில் நீங்கள் காண்பது சக்தி கணபதியின் உருவம் ஆகும்.  விநாயகர் வடிவங்களில் மிகவும் சக்தி வாய்ந்தவர் இவரே.  இவரைப் பற்றி பதிவு தனியாக விரைவில் வெளிவரும்.

மேற்கண்ட காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன் மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும்.  கெட்ட செயல்கள் செய்தால் விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.

தொடர்ந்து 8 நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர்.  சக்தியின் மைந்தன் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவான்.  மனநிம்மதியில்லாதவர்கள் இதை படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.

சதுர்த்தி நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.

தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை படித்து வர அரச வசியம் உண்டாகும்.

தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தை செல்வம் மற்றும் கல்விச் செல்வம் கிட்டும்.


ஓம் கம் கணபதயே நமஹ

ஓம் சங்கடஹர கணபதயே நமஹ

ஓம் சக்தி கணபதயே நமஹ