Showing posts with label சிவ வடிவங்கள். Show all posts
Showing posts with label சிவ வடிவங்கள். Show all posts

Friday, December 15, 2017

பாவங்கள் போக்கும் பாவநாசத் திருப்பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

Thiruvannamalai


தலம் : பொது                                                                                                                                         பண் : பழம் பஞ்சுரம்

திருமுறை : நான்காம் திருமுறை                                                                                         அருளியவர் : திருநாவுக்கரசர்


    1. பற்றற் றார்சேர் பழம்பதியைப் பாசூர் நிலாய பவளத்தைச்
      சிற்றம் பலத்தெந் திகழ்கனியைத் தீண்டற் கரிய திருவுருவை
      வெற்றி யூரில் விரிசுடரை விமலர் கோனைத் திரைசூழ்ந்த
      ஒற்றி யூரெம் உத்தமனை உள்ளத் துள்ளே வைத்தேனே.
    2. ஆனைக் காவில் அணங்கினை ஆரூர் நிலாய அம்மானைக்
      கானப் பேரூர்க் கட்டியைக் கானூர் முளைத்த கரும்பினை
      வானப் பேரார் வந்தேத்தும் வாய்மூர் வாழும் வலம்புரியை
      மானக் கயிலை மழகளிற்றை மதியைச் சுடரை மறவேனே.
    3. மதியங் கண்ணி ஞாயிற்றை மயக்கந் தீர்க்கும் மருந்தினை
      அதிகை மூதூர் அரசினை ஐயா றமர்ந்த ஐயனை
      விதியைப் புகழை வானோர்கள் வேண்டித் தேடும் விளக்கினை
      நெதியை ஞானக் கொழுந்தினை நினைந்தேற் குள்ளம் நிறைந்ததே.
    4. புறம்ப யத்தெம் முத்தினைப் புகலூர் இலங்கு பொன்னினை
      உறந்தை யோங்கு சிராப்பள்ளி உலகம் விளக்கு ஞாயிற்றைக்
      கறங்கு மருவிக் கழுக்குன்றிற் காண்பார் காணுங் கண்ணானை
      அறஞ்சூழ் அதிகை வீரட்டத் தரிமான் ஏற்றை அடைந்தேனே.
    5. கோலக் காவிற் குருமணியைக் குடமூக் குறையும் விடமுணியை
      ஆலங் காட்டி லந்தேனை அமரர் சென்னி யாய்மலரைப்
      பாலிற் றிகழும் பைங்கனியைப் பராய்த் துறையெம் பசும்பொன்னைச்
      சூலத் தானைத் துணையிலியைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    6. மருக லுறையுமா ணிக்கத்தை வலஞ் சுழியின் மாலையை
      கருகா வூரிற் கற்பகத்தைக் காண்டற் கரிய கதிரொளியைப்
      பெருவே ளூரெம் பிறப்பிலியைப் பேணு வார்கள் பிரிவரிய
      திருவாஞ் சியத்தெஞ் செல்வனைச் சிந்தை யுள்ளே வைத்தேனே.
    7. எழிலார் இராச சிங்கத்தை இராமேச் சுரத்தெம் எழிலேற்றைக்
      குழலார் கோதை வரைமார்பிற் குற்றா லத்தெங் கூத்தனை
      நிழலார் சோலை நெடுங்களத்து நிலாய நித்த மணாளனை
      அழலார் வண்ணத் தம்மானை அன்பி லணைத்து வைத்தேனே.
    8. மாலைத் தோன்றும் வளர்மதியை மறைக்காட் டுறையும் மணாளனை
      ஆலைக் கரும்பி னின்சாற்றை அண்ணா மலையெம் அண்ணலைச்
      சோலைத் துருத்தி நகர்மேய சுடரிற் றிகழுந் துளக்கிலியை
      மேலை வானோர் பெருமானை விருப்பால் விழுங்கி யிட்டேனே.
    9. சோற்றுத் துறையெஞ் சோதியைத் துருத்தி மேய தூமணியை
      ஆற்றிற் பழனத் தம்மானை ஆல வாயெம் மருமணியை
      நீற்றிற் பொலிந்த நிமிர்திண்டோ ள் நெய்த்தா னத்தெந் நிலாச்சுடரைத்
      தோற்றக் கடலை அடலேற்றைத் தோளைக் குளிரத் தொழுதேனே.
    10. புத்தூ ருறையும் புனிதனைப் பூவ ணத்தெம் போரேற்றை
      வித்தாய் மிழலை முளைத்தானை வேள்விக் குடியெம் வேதியனைப்
      பொய்த்தார் புரமூன் றெரித்தானைப் பொதியில் மேய புராணனை
      வைத்தேன் என்றன் மனத்துள்ளே மாத்தூர் மேய மருந்தையே.
    11. முந்தித் தானே முளைத்தானை மூரி வெள்ளே றூர்ந்தானை
      அந்திச் செவ்வான் படியானை அரக்க னாற்றல் அழித்தானைச்
      சிந்தை வெள்ளப் புனலாட்டிச் செஞ்சொன் மாலை யடிசேர்த்தி
      எந்தை பெம்மான் என்னெம்மான் என்பார் பாவ நாசமே.

நாம் மேலே காணும் பதிகம் பாவநாசத் திருப்பதிகம் ஆகும்.  இது நான்காம் திருமுறையில் 15ம் பதிகமாக அமைந்துள்ளது.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இது எந்த ஒரு தலத்தையும் குறித்து பாடப்படவில்லை.  எனவே இது பொது என்ற பிரிவில் அடக்கப்பட்டுள்ளது.  இதன் பண் பழம் பஞ்சுரம் ஆகும்.  இப்பதிகத்தில் திருநாவுக்கரசர் பல்வேறு தலங்களில் அருள்பாலிக்கும் சிவபெருமானினின் பெயர்களை குறிப்பிடுகிறார்.

இப்பதிகத்தின் கடைசி வரியில் பாவங்கள் நாசமாகும் என்ற குறிப்பு காணப்படுகிறது.  சிவபெருமானின் பல்வேறு பெயர்களை உள்ளன்புடன் கூறி வழிபாடு செய்ய நாம் செய்த பழம் வினைகள் அனைத்தும் நாசமாகும் என்பது திண்ணம்.   இப்பதிகத்தை தினமும் காலை -  மாலை இரு வேளையும் பாராயணம் செய்ய நாம் எத்தனை பிறவிகளில் செய்த பாவங்களும் அழிந்து போகும் என்பது உறுதி.

இப்பதிகத்தை முதன் முதலில் பிரதோஷ வேளையில் பாராயணம் செய்வது நல்லது.  காலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும், மாலையில் 4.30 மணி முதல் 6.00 மணிக்குள்ளாக ஒரு முறையும் ஆக இருமுறைகள் தினமும் பாராயணம் செய்து வர வேண்டும்.  இதனை பாராயணம் செய்பவர்கள் அசைவத்தை நிரந்தரமாக கைவிட்டவர்களாக இருத்தல் நலம் பயக்கும்.  பாராயணம் விரைவில் பலன் தரும்.

வாழ்க்கையில் நமக்கு ஏற்படும் துன்பங்கள், நோய்கள் ஆகியன நமது முற்பிறவிகளில் செய்த பாவங்களால் தான் ஏற்படுகிறது.  முற்பிறவி மட்டுமல்லாது இப்பிறவி பாவங்களும் அழிந்தால் மட்டுமே நம் வாழ்வில் நிம்மதியும், மகிழ்ச்சியும் ஏற்படும்.  பாவங்களை அழித்து வாழ விழைவோர் அவர் தம் முன்வினைகளை – கர்மவினைகளை அழித்து நிம்மதியாக வாழ எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பாதம் பணிந்து இப்பதிவினை பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல… அனைத்தும் உன்னுடையதே…! அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம்…!  பொன்னம்பலம்…!!  அருணாச்சலம்…!!!


கடன் தீர்க்கும் உன்னத பதிகம்

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையானே போற்றி…!!!

saraparapeswararthirucherai s

runavimochana lingam

தலம் : திருச்சேறை                                                                                                                     அருளியவர் : திருநாவுக்கரசர்

    1. பூரி யாவரும் புண்ணியம் பொய்கெடும்
      கூரி தாய அறிவுகை கூடிடும்
      சீரி யார்பயில் சேறையுட் செந்நெறி
      நாரி பாகன்றன் நாம நவிலவே.
    2. என்ன மாதவஞ் செய்தனை நெஞ்சமே
      மின்னு வார்சடை வேத விழுப்பொருள்
      செந்நெ லார்வயற் சேறையுட் செந்நெறி
      மன்னு சோதிநம் பால்வந்து வைகவே.
    3. பிறப்பு மூப்புப் பெரும்பசி வான்பிணி
      இறப்பு நீங்கியிங் கின்பம்வந் தெய்திடும்
      சிறப்பர் சேறையுட் செந்நெறி யான்கழல்
      மறப்ப தின்றி மனத்தினுள் வைக்கவே.
    4. மாடு தேடி மயக்கினில் வீழ்ந்துநீர்
      ஓடி யெய்த்தும் பயனிலை ஊமர்காள்
      சேடர் வாழ்சேறைச் செந்நெறி மேவிய
      ஆட லான்தன் அடியடைந் துய்ம்மினே.
    5. எண்ணி நாளும் எரியயிற் கூற்றுவன்
      துண்ணென் தோன்றிற் துரக்கும் வழிகண்டேன்
      திண்ணன் சேறைத் திருச்செந் நெறியுறை
      அண்ண லாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    6. தப்பி வானந் தரணிகம் பிக்கிலென்
      ஒப்பில் வேந்தர் ஒருங்குடன் சீறிலென்
      செப்ப மாஞ்சேறைச் செந்நெறி மேவிய
      அப்ப னாருளர் அஞ்சுவ தென்னுக்கே.
    7. வைத்த மாடும் மடந்தைநல் லார்களும்
      ஒத்தொவ் வாதவுற் றார்களு மென்செய்வார்
      சித்தர் சேறைத் திருச்செந் நெறியுறை
      அத்தர் தாமுள ரஞ்சுவ தென்னுக்கே.
    8. குலங்க ளென்செய்வ குற்றங்க ளென்செய்வ
      துலங்கி நீநின்று சோர்ந்திடல் நெஞ்சமே
      இலங்கு சேறையிற் செந்நெறி மேவிய
      அலங்க னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    9. பழகி னால்வரும் பண்டுள சுற்றமும்
      விழவிடா விடில் வேண்டிய எய்தொணா
      திகழ்கொள் சேறையிற் செந்நெறி மேவிய
      அழக னாருள ரஞ்சுவ தென்னுக்கே.
    10. பொருந்து நீண்மலை யைப்பிடித் தேந்தினான்
      வருந்த வூன்றி மலரடி வாங்கினான்
      திருந்து சேறையிற் செந்நெறி மேவியங்
      கிருந்த சோதியென் பார்க்கிட ரில்லையே.

நாம் மேலே காணும் பதிகம் கடன் தீர்க்கும் பதிகம் ஆகும்.  இதனை அருளியவர் திருநாவுக்கரசர் ஆவார்.  இப்பதிகம் திருச்சேறை என்னும் தலத்தில் அருளப்பட்டதாகும்.  இத்தலத்து இறைவன் பெயர் செந்நெறியப்பர் – சாரபரமேசுவரர்.  இத்தலத்து இறைவி பெயர் ஞானவல்லி – ஞானாம்பிகை.  இத்தலத்தில் மார்கண்டேய முனிவர் ருணவிமோசன லிங்கத்தினை நிறுவி பூசித்து தனது பிறவிகடன் நீங்க பெற்றார்.

இதனை முதன் முதலில் தொடங்கும் போது திங்கட்கிழமையில் தொடங்க வேண்டும்.  தினமும் 1 முறை இப்பதிகத்தை கடன் தீர்த்த இறைவனை நினைத்து உள்ளன்புடன் பாராயணம் செய்ய இப்பிறவியின் கடன்கள் அனைத்தும் நீங்கி பிறவியில்லா பெருநிலை சித்திக்கும்.  இதனை தொடர்ந்து பாராயணம் செய்து வர எத்தகைய கடன்கள் இருந்தாலும் அவை அனைத்தும் நீங்கும் என்பது உறுதி.

இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்கள் நிரந்தரமாக அசைவத்தை நிறுத்தியிருக்க வேண்டும்.  இப்பதிகத்தை பாராயணம் செய்பவர்களின் அனைத்து விதமான இடர்களையும், கடன்களையும் இறைவன் நீக்கியருள்வார் என்பது திண்ணம்.  மீண்டும் இடர்களும், கடன்களும் ஏற்படாது என்பது உறுதி.  இப்பதிகத்தை தினமும் பாராயணம் செய்பவர்கள் வாழ்வில் ஏற்படும் துன்பங்கள் மற்றும் கடன்களைப் பற்றி கவலை கொள்ள வேண்டிய அவசியமே வாழ்வில் வராது.

இப்பிறவியின் கடன்கள் மட்டுமல்லாது அனைத்து இடர்களையும் போக்கி துன்பமில்லா இனிய வாழ்வை தரும் – கடன் தீர்க்கும் உன்னமான பதிகத்தை கடன் உள்ளவர்கள் மட்டுமல்லாது பிறவி கடன்களை போக்கி பிறவியில்லா பெருவாழ்வினை வாழ நினைப்பவர்களும் நிம்மதியான வாழ்வு பெற ஆதி சித்தன் - கருணையின் வடிவம் – அருணையின் நாயகன் எல்லாம் வல்ல அண்ணாமலையானின் பொற்பாதம் பணிந்து பதிவிடுகிறேன்.


எதுவும் என்னுடையதல்ல…!  அனைத்தும் உன்னுடையதே…!  அருளாளா…!! அருணாச்சலா…!!!

திருச்சிற்றம்பலம் – பொன்னம்பலம் – அருணாச்சலம்

Thursday, February 6, 2014

2014 ம் வருட பரணி நட்சத்திரம் வரும் நாட்கள்

ashta bairavar

Barani - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, February 4, 2014

2014 ம் வருட மாத சிவராத்திரி வரும் நாட்கள்

lor23a

Theipirai Chadhurdhasi - 2014

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Tuesday, December 10, 2013

விஜய வருட (2013–2014) பரணி நட்சத்திர நாட்கள்

bhairava

Barani

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் ஹ்ரீம் மஹாபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, December 9, 2013

சிவனின் 5 முகங்களும் – 25 மகேஸ்வர வடிவங்களும்

siva family 1

சிவபெருமானின் 5 முகங்கள்:-

  1. ஈசான முகம்
  2. தத்புருஷ முகம்
  3. அகோர முகம்
  4. வாமதேவ முகம்
  5. சத்யோஜாத முகம்

ஒவ்வொரு முகத்திலிருந்தும் ஐந்து வடிவங்கள் தோன்றின.  அவையாவன:-

 

ஈசான முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. சோமாஸ்கந்தர்
2. நடராசர்
3. ரிஷபாரூடர்
4. கல்யாணசுந்தரர்
5. சந்திரசேகரர்

 

தத்புருஷ முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. பிட்சாடனர்
2. காமாரி
3. காலாரி
4. சலந்தராரி
5. திரிபுராரி

 

அகோர முகத்திலிருந்து தோன்றிய 5 வடிவங்கள்:

1. கஜசம்ஹாரர்
2. வீரபத்திரர்
3. தக்ஷிணாமூர்த்தி
4. கிராதமூர்த்தி
5. நீலகண்டர்

 

வாமதேவ முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. கங்காதரர்
2. சக்ரவரதர்
3. கஜாந்திகர்
4. சண்டேசானுக்கிரகர்
5. ஏகபாதர்

 

சத்யோஜாத முகத்திலிருந்து தோன்றிய 5 முகங்கள்:

1. லிங்கோத்பவர்
2. சுகாசனர்
3. உமாமகேசர்
4. அரிஹரர்
5. அர்த்தநாரி

 

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

 

Sunday, December 8, 2013

சிவபெருமானின் 5 முகங்களின் விளக்கம்

shivalinga-CP63_l

சிவபெருமானின் முகங்கள் ஐந்து ஆகும்.  அவையாவன:

  1. சத்யோஜாதம்
  2. வாமதேவம்
  3. தத்புருஷம்
  4. அகோரம்
  5. ஈசானம்

 

சத்யோஜாதம்:

பிரம்ம தேவன் சிவபெருமானை மேற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் அழகிய வடிவத்துடன், வெண்மை நிறமான இளையோனாய் பிரம்மன் முன்பு தோன்றினார்.  இந்த முகமே சத்யோஜாதம் எனப்படும்.

 

வாமதேவம்:

மீண்டும் பிரம்ம தேவன் வடக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்த போது இறைவன் சிவந்த நிறத்துடன் பாம்பை அணிந்தும், மானும் மழுவும் கைகளில் ஏந்தி பிரம்ம தேவனுக்கு காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே வாமதேவம் எனப்படும்.

 

தத்புருஷம்:

அதன் பிறகு பிரம்ம தேவன் கிழக்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் தங்க நிறத்துடன் பிறையை சென்னியில் சூடி காட்சி கொடுத்தார்.  இறைவனின் இந்த முகமே தத்புருஷம் எனப்படும்.  பிரம்மனின் தவத்தால் மகிழ்ந்த இறைவன் உளம் மகிழ்ந்து தனது அழகிய உருவத்திலிருந்து காயத்ரீ தேவியை உண்டாக்கி பிரம்ம தேவனிடம் அளித்தார்.  காயத்ரீயை வணங்கி வருபவர்களுக்கு நரகம் கிடையாது எனவும் வரமளித்தார்.

 

அகோரம்:

பிறகு பிரம்மா தெற்கு திசையினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் முக்கண் கொண்டவராய் நெருப்பினையும், வாளினையும் கரத்தில் கொண்டவராய் கரிய நிறத்துடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகத்திற்கு அகோரம் என்று பெயர்.

 

ஈசானன்:

கடைசியாக பிரம்ம தேவன் ஆகாயத்தினை நோக்கி சிவபெருமானை குறித்து தவம் செய்தார்.  இறைவன் சாம்பல் வண்ணத்துடன் முக்கண் கொண்டவராயும், இளமதியை சென்னியில் சூடியவாறும், கோரைப்பற்கள் கொண்ட உருமாய் இரண்டு பெண்களுடன் தோன்றினார்.  இறைவனின் இந்த முகமே ஈசானம் எனப்படும்.  அதில் ஒரு பெண் மாயன் முதல் தேவர்கள் வரை அனைவரையும் ஈன்ற அன்னை ஆவாள்.  மற்றொரு பெண் வெண் தாமரையில் வீற்றிருக்கும் கலைமகள் ஆவாள்.

 

இந்த ஐந்து முகங்களையும் நினைத்து தியானம் செய்தாலும் அல்லது வழிபாடு செய்தாலும் இப்பிறவியில் சகல சுகங்களும் கிட்டி மறுபிறவியில் முக்தியும் கிட்டும் என்பது பிரம்ம தேவனின் வாக்கு ஆகும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சத்யோஜாதய நமஹ

ஓம் வாமதேவாய நமஹ

ஓம் தத்புருஷாய நமஹ

ஓம் அகோராய நமஹ

ஓம் ஈசானாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

 

Saturday, December 7, 2013

அட்ட வீரட்டத் தலங்கள் : வீரட்டானங்கள் - 8

lord-shiva-31v

வ.எண் தலம் இருப்பிடம் தலச்சிறப்பு
1. திருக்கண்டியூர் தஞ்சை மாவட்டம் பிரம்மனின் தலை கொய்யப்பட்ட தலம்
2. திருக்கோவிலூர் விழுப்புரம் மாவட்டம் அந்தகாசூரன் அழிக்கப்பட்ட தலம்
3. திருவதிகை விழுப்புரம் மாவட்டம் திரிபுரம் தகனம் செய்யப்பட்ட தலம்
4. திருப்பறியலூர் நாகை மாவட்டம் தட்சனின் தலை கொய்யப்பட்ட தலம்
5. திருவிற்குடி நாகை மாவட்டம் சலந்திராசூரன் அழிக்கப்பட்ட தலம்
6. திருவழுவூர் நாகை மாவட்டம் யானையை கொன்று தோலை அணிந்த தலம்
7. திருக்குறுக்கை நாகை மாவட்டம் மன்மதன் எரிக்கப்பட்ட தலம்
8. திருக்கடவூர் நாகை மாவட்டம் காலனை காலால் உதைத்த தலம்
 
 
குறிப்பு:- அட்டவீரட்டத்தலங்கள் பற்றி தனித்தனி பதிவுகள் வெளி வரும்.
 
 
 
தென்னாடுடைய சிவனே போற்றி…!
 
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
 
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
 
ஓம் சிவ சிவ ஓம்
 
 
 

Friday, December 6, 2013

வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவர் – உண்மை நிகழ்வு

vaidhyanaadhar vaitheeswaran kovil

bairavar statueஸ்ரீ காலபைரவர் பெருமான்

 

வழிபாடு செய்யக்கூடிய 25 சிவ வடிவங்களில் பைரவரும் ஒருவர்.  பைரவரின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  காலத்ததை வென்ற தெய்வங்கள் பதிவில் காளி மற்றும் காலபைரவரின் பெருமைகளை ஆன்மீகச்சுடர் பதிவாக வெளியிட்டுருந்தது.  அதனை படித்து பயன் பெற்ற ஒரு வாசகியின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தினை பைரவரின் பெருமையினை உலகறிய செய்யும் பொருட்டு ஒரு பதிவாக  வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.

 

நாம் மேலே குறிப்பிட்ட அந்த வாசகி வெளிநாட்டினை சேர்ந்தவர்.  அவருக்கு திருமணம் ஆகி 2 குழந்தைகள் உண்டு.  அதில் இரண்டாவது குழந்தை பிறந்து சுமார் 7 மாதங்கள் ஆகிறது.  அக்குழந்தைக்கு இரண்டாவது மாதத்திலிருந்து சளி மற்றும் இருமல் தொல்லை இருந்து வந்துள்ளது.  மிகச்சிறந்த குழந்தைகள் நல மருத்துவ நிபுணர்கள் இருவரிடம் குழந்தைக்கு மருத்துவம் செய்திருக்கிறார்கள்.  மருத்துவர்கள் எவ்வளவோ மருந்துகளை தந்திருக்கிறார்கள்.  குழந்தைக்கு அவற்றினை அளித்திருக்கிறார்கள்.

 

ஆனால் சளி மற்றும் இருமலின் தாக்கம் கொஞ்சம் கூட குறைந்த பாடில்லை.  அந்த வாசகி நமது வலைப்பூவில் காலத்தை வென்ற தெய்வங்கள்: காளியும் - கால பைரவரும் பதிவில் கூறப்பட்டதை படித்திருக்கிறார்.  அந்த தகவல் இதோ…

 

காலபைரவர் காலத்தின் தெய்வம். காலத்தினை இயக்குபவர். ஞானத்தினை அளிப்பவர். பயம் நீக்குபவர். இவரை வழிபட பல முறைகள் இருக்கின்றன.  இருப்பினும் மனதார இவரை ஒரு முறை நினைத்தாலே போதும் ஓடோடி வந்து காத்து அருள் புரிவார்.  பூர்வ புண்ணியம் இருந்தால் மட்டுமே இவரின் வழிபாட்டு முறைகள் உங்களை வந்தடையும். சித்தர்கள் அனைவரும் இவரின் அருள் பெற்றவர்களே. சித்தர்கள் செய்த செயற்கரிய செயல்கள் எல்லாம் பைரவரின் திருவிளையாட்டே ஆகும்.

 

ஒரு நாள் இரவு சுமார் 11 மணியளவில் குழந்தைக்கு சளி மற்றும் இருமல் அதிகமாகி இருக்கிறது.  அப்போது அந்த வாசகி மேற்கண்டவாறு காலபைரவரை மனதார நினைத்து தாம் இனி ஒரு போதும் அசைவம் சாப்பிட மாட்டேன் என்றும் தனது குழந்தையை நோயிலிருந்து காப்பாற்று மாறும் வேண்டியிருக்கிறார்.  அவர் வேண்டிய 10 நிமிடங்களில் காலபைரவரின் அருளால் அக்குழந்தை குணம் பெற்றது.  அப்போது சரியான சளியும், இருமலும் திரும்பவும் எட்டிக்கூடப் பார்க்கவில்லை.  அந்த வாசகி மிகுந்த மகிழ்ச்சி அடைந்திருக்கிறார்.  இந்த நிகழ்வில் காலபைரவர் பெருமான் சக்தி மிகுந்த மனோ பைரவராகவும், வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவராகவும் வந்திருக்கிறார்.

 

ஒரே ஒரு முறை மனதில் நினைத்தவுடனே வந்து வைத்தியம் செய்த வைத்தியநாத பைரவரின் அருளினை என்னவென்று சொல்வது…?  நினைக்கும் போதே மெய் சிலிர்க்கிறது.  எல்லாம் அவன் செயல்.  அந்த வாசகி இந்த நிகழ்வினை மின்னஞ்சலில் தெரிவித்து மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.  இந்த நிகழ்வு பைரவர் வழிபாட்டின் எளிமையையும், ஆற்றலையும் உணர்த்துகிறது.  இந்நிகழ்வு பைரவரின் அளவிலா கருணை உள்ளத்தையும், அந்த வாசகியின் உயர்ந்த பக்தியையுமே காட்டுகிறது.

 

இந்த நிகழ்வு அந்த வாசகியின் அனுமதி பெற்றே பதிவாக வெளியிடப் படுகிறது.  அவரது விருப்பப்படி அவரது பெயர் மற்றும் வசிக்கும் நாடு இவற்றை வெளிவிடப்பட வில்லை.  அவருக்கு ஆன்மீகச்சுடர் வலைப்பூ தனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறது.

 

காலத்தினை வென்ற தெய்வமான காலபைரவருக்கு கோடான கோடி நன்றிகளும்…! வணக்கங்களும்….!

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

 

 

Thursday, December 5, 2013

நலம் தரும் நட்சத்திர தலங்கள் – 27

constellation_north

Star -27 Temples_Page_1Star -27 Temples_Page_2Star -27 Temples_Page_3

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, December 2, 2013

சிவபெருமானின் 64 திருப்பெயர்கள்

lord-shiva-53a Siva - 64

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் நமசிவாய     |     ஓம் சிவாயநம     |     ஓம் சிவாய சிவ சிவ

ஓம் சிவ சிவ ஓம்

Sunday, December 1, 2013

மாதந்தோறும் வரும் அஷ்டமிகளின் பெயர்கள்

image

வ.எண் மாதம் தேய்பிறை அஷ்டமியின் பெயர்

1.

சித்திரை அநாதனாஷ்டமி
2. வைகாசி சதாசிவாஷ்டமி
3. ஆனி பகவதாஷ்டமி
4. ஆடி நீலகண்டாஷ்டமி
5. ஆவணி ஸ்தாணுவாஷ்டமி
6. புரட்டாசி சம்புகாஷ்டமி
7. ஐப்பசி ஈஸ்வராஷ்டமி
8. கார்த்திகை ருத்திராஷ்டமி
9. மார்கழி சங்கராஷ்டமி
10. தை தேவதாஷ்டமி
11. மாசி மகேஸ்வராஷ்டமி
12. பங்குனி த்ரம்பாகாஷ்டமி

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Wednesday, November 27, 2013

நடனசபாபதி - 7

nataraj

சப்த விடங்க தலங்கள்:-

வ.எண் தலத்தின் பெயர் இறைவனின் பெயர் நடனத்தின் பெயர்
1. திருவாரூர் வீதிவிடங்கர் அசபா நடனம்
2. திருநள்ளாறு நகர விடங்கர் அ) உரை விடங்கர் உன்மத்த நடனம்
3. திருநாகைக்காரோகணம் சுந்தர விடங்கர் வீசி நடனம்
4. திருக்காறாயில் ஆதி விடங்கர் குக்குட நடனம்
5. திருக்கோளிலி அவனி விடங்கர் பிருங்க நடனம்
6. திருவாய்மூர் நீல விடங்கர் கமல நடனம்
7. திருமறைக்காடு புவனி விடங்கர் அம்சபாத நடனம்

 

சப்த ஸ்தான தலங்கள்:-

வ.எண் தலத்தின் பெயர்
1. திருவையாறு
2. திருப்பழனம்
3. திருச்சோற்றுத்துறை
4. திருவேதிக்குடி
5. திருக்கண்டியூர்
6. திருப்பூந்துருத்தி
7. திருநெய்த்தானம்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, November 25, 2013

சக்தி மிக்க மனோ பைரவர் - காலபைரவாஷ்டமி சிறப்பு பதிவு

KalaBhairavDarbarSquare

ஸ்ரீ காலபைரவர், காத்மாண்டு, நேபாளம்

இன்று காலபைரவாஷ்டமி ஆகும்.  கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமியில் தான் காலபைரவர் அவதாரம் செய்தார்.  இத்தகைய நன்னாளில் பைரவரைப் பற்றி சிறப்பு பதிவு வெளிவிடுவதில் ஆன்மீகச்சுடர் வலைப்பூ பெருமையும், மகிழ்ச்சியும் கொள்கிறது.

 

பைரவர் என்றாலே மனதில் ஒரு வித பரவசமும், பக்தியும் குடி கொள்ளும் என்பது எல்லோரும் உணர்ந்த ஒரு நிகழ்வு ஆகும்.  பைரவர் என்பதன் பொருள் இதோ.

 

பை  - காத்தல்

ர – அழித்தல்

வ – படைத்தல்

 

மூன்று தொழில்களும் செய்யும் நாயகர் பைரவர் ஆவார்.  அதனால் தான் பைரவ பெருமானுக்கு முத்தொழில்களின் அடையாளமான திரிசூலம் ஆயுதமாக வழங்கப்பட்டுள்ளது.  மும்மூர்த்திகளின் தொழிலையும் செய்யும் ஆற்றல் கொண்டவர்.  இவர் சிவபெருமானின் 64 வடிவங்களில் ஒருவர்.  நிர்வாண கோலத்தில் இருப்பவர்.  மூன்று கண்களை உடையவர்.  பாம்புகளை அணிகலனாக கொண்டவர்.  குண்டலம், சடைமுடியில் மாலை, கத்தி, சூலம், கபாலம், உடுக்கை, கோரைப்பற்கள் மற்றும் நாயை வாகனமாக கொண்டவர்.

 

சிவபெருமானின் 64 வடிவங்களில் பைரவர் கோலமே உலகெங்கும் வியாபித்து இருக்கும் சிவ வடிவமாகும்.  பைரவர் எங்கும் நீக்கமற நிறைந்திருப்பவர்.  நம் வாழும் இந்த கர்ம பூமியில் பைரவருக்கு எத்தனையோ கோவில்கள் கட்டப்பட்டு இருக்கிறது.  பைரவர் முதலில் ஒரு வடிவமாகவும், பின்பு 4 வடிவமாகவும், அதன் பின்னர் 8 வடிவங்களாகவும், அதே 8 வடிவங்கள் 64 வடிவங்களாகவும் தோன்றினார்.  எந்த பைரவ வடிவத்தை வழிபாடு செய்தாலும் அது ஆதிசிவனின் அவதாரமான ஸ்ரீ சொர்ண பைரவரையே சென்று சேரும்.

 

எத்தனை கோவில்கள் இருந்தாலும் மனம் என்ற கோவிலே மிகவும் சிறப்பானது.  எத்தனை பைரவர்களும் இருந்தாலும் நம் மனதில் குடி கொண்டிருக்கும் பைரவரே மிக மிக மிக சக்தி கொண்டவர்.  உலகெங்கும் வியாபித்திருக்கும் பைரவ பெருமான் நம் உள்ளத்தில் இருப்பதில் வியப்பொன்றும் இல்லை.  மனோ பைரவர் நம் உடலோடும், உயிரோடும் கலந்து நிற்பவர்.  இதை எப்படி உணர்வது?  அது ஒன்றும் கடினமான செயல் இல்லை.  நாம் உள்ளன்புடன் பைரவ பெருமானை வழிபாடு செய்தாலே போதுமானது.  அப்படியென்றால் கோவில்களுக்கு சென்று பைரவரை வழிபாடு செய்யக்கூடாதா?  வழிபாடு செய்யலாம்.  தவறில்லை.

 

நம்மில் பலருக்கு கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்ய நேரம் இருக்காது.  மேலும் வீட்டில் சொர்ணபைரவர் வழிபாடும் செய்ய இயலாத நிலையில் இருப்பார்கள்.  அதற்காக கவலை கொள்ள வேண்டாம்.  நமது மனமே பெரிய கோவில்.  நம் மனக்கோவிலில் பைரவ பெருமானை நிறுத்தி வழிபாடு செய்வதே மிகப் பெரிய சிவ வழிபாடு ஆகும்.  அதற்கு சில மனப்பயிற்சிகள் கண்டிப்பாக தேவை.  சதா சர்வ காலமும் மனதில் பைரவர் பெருமானை நினைத்து வந்தாலே போதுமானது.  அதாவது பூரண சரணாகதி அடைய வேண்டும்.  நாம் செய்யும் அனைத்து செயல்களையும் பைரவ பெருமானுக்கே அர்ப்பணம் செய்ய வேண்டும்.  எல்லாம் இறைவனின் செயல் என்ற மனநிலை வருகிறதோ அந்த கணத்திலிருந்தே பைரவர் பெருமான் நம் உள்ளங்களி்ல் குடியேறுவார் என்பது திண்ணம்.

 

அதன் பின்னர் பைரவ பெருமான் நம் மனதிலிருந்து இயங்கும் மாபெரும் பைரவ சக்தியாக செயல்படுவார்.  நாம் எந்த பைரவரை வழிபாடு செய்தாலும் தவறில்லை.  நாம் வணங்கும் பைரவரே நம் மனோ பைரவராக செயல்படுவார்.  எங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் பைரவ பெருமானை நாம் வழிபாடு செய்ய நமது மனத்தை விட சிறந்த ஆலயம் இந்த உலகத்தில் இருக்க முடியாது.  எனவே இவ்வாறு நாம் வழிபாடு செய்யும் காலத்தில் நமது உடல், உள்ளம் மற்றும் வாக்கு இவற்றில் சுத்தம் இருந்தாலே போதுமானது.  பைரவர் நமது மனத்தில் வந்து நிரந்தரமாக குடியேறுவார்.  அருள் புரிவார்.  தவறுகளை சுட்டிக்காட்டுவார்.  தண்டனைகளை கொடுத்து திருத்துவார்.  தமது அருள் மழையில் நனைய வைப்பார்.

 

அது மட்டுமல்லாமல் நமது கர்மவினைகளை சுட்டெரிப்பார்.  பிறவியில்லா பெருநிலை அருளுவார்.  நவகோள்களையும் நமக்கு நன்மை செய்யுமாறு ஆணையிடுவார்.  நமது பிறவி பயனை அடைய வைப்பார்.  நாளடைவில் நாம் பிறவிப்பிணியை ஒழித்து ஒரு பைரவ கணமாக மாறி பைரவ உலகத்தில் பைரவருடன் ஆனந்தமாக இனிதுடன் வாழலாம்.  நமது உடல், உயிர் மற்றும் வாக்கு இவற்றில் பைரவர் கலந்து நிற்பார்.  நம் பார்வை பட்ட மாத்திரத்தில் அனைவரின் கர்ம வினைகளும் நாசமாகும்.  பைரவ சொரூபமாகவே நாமும் மாறிடுவோம்.  பைரவரைப் போல் வேரொரு தெய்வத்தை நாம் இந்த கர்ம பூமியில் காண இயலாது.  இந்த உலகத்தில் நம்மை நாம் அனைத்து வித பிரச்சனைகளிலிருந்தும் காத்துக் கொள்ள பைரவரை துணைக் கொள்ள வேண்டும்.

 

காலபைரவாஷ்டமி நாளில் இப்பதிவினை எழுத வைத்த இறைவன் காலபைரவ பெருமானின் பாதம் பணிந்து அவருக்கு இந்த பதிவை சிறு காணிக்கையாக ஆன்மீகச்சுடர் வலைப்பூ அர்ப்பணிக்கிறது.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் க்லீம் காலபைரவாய நமஹ

ஓம் சிவ சிவ ஓம்

சிவமயம் – 5

Umamaheshwara-Lord-Shiva-Parvati

பஞ்சகுண மூர்த்திகள்:-

வ.எண் மூர்த்தி குணம்
1. தட்சணாமூர்த்தி சாந்த மூர்த்தி
2. நடராசர் ஆனந்த மூர்த்தி
3. பைரவர் உக்கிர மூர்த்தி
4. பிட்சாடனர் வசீகர மூர்த்தி
5. ஸோமாஸ்கந்தர் கருணா மூர்த்தி
 
 
 
பஞ்சதாண்டவ தலங்கள்:-
 
வ.எண் தாண்டவம் தலம்
1. ஆனந்த தாண்டவம் தில்லை, பேரூர்
2. அசபா தாண்டவம் திருவாரூர்
3. சுந்தரத் தாண்டவம் திருவாலவாய் (மதுரை)
4. ஊர்த்துவ தாண்டவம் திருப்புக்கொளியூர் (அவிநாசி)
5. பிரம்ம தாண்டவம் திருமுருகன் பூண்டி

 

பஞ்ச புலியூர்கள்:-

வ.எண் புலியூர் அருகில் உள்ள இடம்
1. பெரும்பற்றப் புலியூர் சிதம்பரம்
2. திருப்பாதிரிப்புலியூர் கடலூர்
3. ஓமாம்புலியூர் காட்டுமன்னார்குடி
4. எருக்கத்தம்புலியூர் விருத்தாச்சலம்
5. பெரும்புலியூர் திருவையாறு

 

பஞ்சபூதத் தலங்கள்:-

வ.எண் பூதம் தலம்
1. நிலம் திருவாரூர், காஞ்சிபுரம்
2. நீர் திருவானைக்காவல்
3. நெருப்பு திருவண்ணாமலை
4. காற்று திருக்காளத்தி
5. ஆகாயம் சிதம்பரம்

 

பஞ்ச சபைகள்:-

வ.எண் சபை தலம்
1. பொற்சபை சிதம்பரம்
2. வெள்ளி சபை மதுரை
3. இரத்தின சபை திருவாலங்காடு
4. தாமிர சபை திருநெல்வேலி
5. சித்திர சபை திருக்குற்றாலம்

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Thursday, November 21, 2013

சிவபெருமானின் திருப்பெயர்கள் – திருவாதிரை சிறப்பு பதிவு

image SIVA 1000_Page_01SIVA 1000_Page_02SIVA 1000_Page_03SIVA 1000_Page_04SIVA 1000_Page_05SIVA 1000_Page_06SIVA 1000_Page_07SIVA 1000_Page_08SIVA 1000_Page_09SIVA 1000_Page_10SIVA 1000_Page_11SIVA 1000_Page_12SIVA 1000_Page_13SIVA 1000_Page_14SIVA 1000_Page_15SIVA 1000_Page_16SIVA 1000_Page_17SIVA 1000_Page_18

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

Monday, November 18, 2013

சிவ வழிபாடு முழுமை பெற வணங்க வேண்டிய கடவுள்கள்

lord-dakshinamurthyimage

சிவ வழிபாடு என்பது மிகப் பெரிய செயல் ஆகும்.  அதற்கு தடைகளும், இடையூறுகளும் வருவது இயற்கையே.  இதற்கு காரணம் நமது கர்மவினைகளே.  கர்மவினைகளை அழிக்க பல எளிய வழிகள் உண்டு.  கர்மவினைகளை அழிக்கும் செயலே இயற்கைக்கு மாறான ஒன்றாகும்.  நாம் பிறந்த இந்த பூமியானது ஒரு கர்ம பூமி.  இதில் பிறந்த ஒவ்வொருவரும் அவரவர் தம் கர்ம வினைகளை தொலைக்க பிறந்தவர்களே.  இந்த கர்மவினைகள் இரண்டாகும்.  அவை நல்வினை மற்றும் தீவினை ஆகும்.  நல்வினை மற்றும் தீவினை இவற்றை நாம் அனுபவித்தே ஆக வேண்டும்.  இது தான் விதி என்று அழைக்கப்படுகிறது.

ஆனால் விதியை மதியால் வெல்லலாம்.  ஆம் மதி என்பது இங்கே முதலில் சந்திரனையும் பின்பு அதே சொல் நமது அறிவையும் குறிக்கிறது.  ஒருவரின் பிறந்த ஜாதகத்தில் மதி என்கிற சந்திரன் நல்ல நிலையில் இருந்தால் அவர் தம் அறிவின் துணை கொண்டு விதியை வெல்லுவார் என்பது திண்ணம்.  சந்திரன் ஒருவரது ஜாதகத்தில் நல்ல இடத்தில் இருப்பது என்பது நல்ல நிலை என்று எடுத்துக்கொள்ள இயலாது.  ஷட்பல நிர்ணயம் என்றொரு கணக்கீடு இருக்கிறது.  அதன் படி சந்திரனின் பலம் நன்றாக இருந்தால் அவர் விதியை மதியால் வெல்லுவார்.

மதி என்கிற சந்திரனை சூடிய கடவுள்கள் வழிபாடு நமது கர்மவினைகளை போக்கக்கூடியது.  பிறைசூடிய தெய்வங்கள் சிவபெருமானை பிரதிபலிக்கும் தெய்வங்கள் ஆகும்.  அவ்வாறு இருக்கும் தெய்வங்கள் சிவபெருமானின் அம்சம் பொருந்தியவையே.  நமது சிவ வழிபாட்டில் வரும் தடைகளும், இடையூறுகளும் முதலில் நமது மனதை பாதிக்கக்கூடியவை.  இவ்வாறு வரும் இடையூறுகளை களைந்து சிவ வழிபாடு முழுமை பெற இரண்டு சிவ வடிவங்களின் அருள் மிகவும் தேவை.

முதலில் வரும் சிவ வடிவம் அமைதியே உருவான தென்முகக்கடவுள் (தட்சணாமூர்த்தி).  இறுதியாக வரும் சிவ வடிவம் பைரவர்.  பைரவர் என்றால் எந்த பைரவர் வேண்டுமானாலும் இருக்கலாம்.  இந்த இரண்டு சிவ வடிவங்களின் துணையின்றி சிவ வழிபாடு முழுமை பெறாது.  இந்த இரண்டு சிவ வடிவங்கள் மொத்தம் உள்ள 64 சிவ வடிவங்களிலும், வழிபாட்டிற்குரிய 25 சிவ வடிவங்களிலும் மிக மிக முக்கியமானவை. தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய இரு சிவ வடிவங்களும் ஒவ்வொரு சிவாலயங்களிலும் தனித்தனி சந்நிதி கொண்டு அருள் வழங்கும் வடிவங்கள் ஆகும்.  தட்சணாமூர்த்தி மற்றும் பைரவர் ஆகிய சிவ வடிவங்களும் சென்னியில் பிறையை சூடியவர்கள்.  இவர்களது தலையில் மூன்றாம் பிறை சந்திரனை நாம் காணலாம். 

dakshinamurthy_by_xyzofart

தட்சணாமூர்த்தி சிவபெருமானின் யோகவடிவம்.  ஞானகுரு என்றழைக்கப்படும் தட்சணாமூர்த்தி அமைதியே உருவானவர்.  சிவ வடிவங்களில் மிகவும் சிறப்பானவர்.  தென் திசையை நோக்குபவர்.  இவரை வழிபடுவது மிகவும் எளிது.  இவரை வழிபட கடினமான வழிமுறைகள் மற்றும் கட்டுப்பாடுகள் ஏதும் கிடையாது.  இவரை தொடர்ந்து வழிபட ஞானமும், செல்வமும், வெற்றியும் உண்டாகும்.  நமது கர்மவினைகள் படிப்படியாக நீங்கும். மந்திர செபம் செய்பவர்களுக்கு உகந்த கடவுள் இவரே.  இவரை வழிபட மனம் அமைதி பெறும்.  இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.  மந்திர செபம் செய்பவர்களின் மந்திர செபங்களுக்கு சக்தியை தருபவரும் இவரே.  மனநிம்மதியை தருபவரும் இவரே.

“ஓம் நமோ பகவதே தக்ஷ்ணாமூர்த்தயே மஹ்யம் மேதாம் ப்ரஞ்ஞாம் ப்ரயச்ச ஸ்வாஹா”

மேற்கண்ட மந்திரம் தட்சணாமூர்த்தியின் சிறப்பான மந்திரம் ஆகும்.  இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.  அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.  மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.  பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும்.  பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.    இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது.  தட்சணாமூர்த்தியின் முன்பு எவ்வித தோஷமும், பாவமும் நில்லாது ஓடும்.  இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.

image

கடைசியாக வருபவர் கர்மவினைகளை தன் பார்வையாலே எரிக்கும் வல்லமை கொண்ட பைரவர் ஆவார்.  இவரே சிவத்தலத்தில் இறுதி சிவ வடிவம் ஆவார்.  பைரவர்களுள் சொர்ணபைரவரே வீட்டில் வைத்து வழிபாடு செய்யத்தக்கவர்.  மற்ற அனைத்து பைரவ வடிவங்கள் கோவிலிலோ அல்லது காடுகளிலோ அல்லது மலைகளிலோ வைத்து வழிபடத்தக்கன.  பைரவ வடிவம் சிவ வழிபாட்டில் ஏற்படும் கர்மவினை பாதிப்புகளை நீக்க வல்ல வடிவம் ஆகும்.  பைரவரை தொடர்ந்து வழிபடுவதால் மட்டுமே நாம் செய்யும் சிவ வழிபாட்டின் பலனை அடையமுடியும்.  பைரவரே நவக்கோள்களின் அதிபதி ஆவார்.  சிவ வழிபாட்டின் பலனை நமக்கு தருமாறு நவக்கோள்களுக்கு ஆணையிடும் தலைவரும் பைரவரே ஆவார்.  இவரை வழிபடாமல் இருந்தால் நமக்கு சிவ வழிபாட்டின் பலன் கிடைக்காது.பைரவரே காலத்தையும், காலனையும் வென்றவர்.  காலகாலர் என்ற பெயரை கொண்டவரும் பைரவரே ஆவார்.  தெற்கு திசை நோக்கும் பைரவர் மிகவும் சக்தி வாய்ந்தவர். 

பைரவர் சிவபெருமானின் கோபமே உருவான ருத்ர வடிவம்.  பைரவர் நம்மை நவக்கோள்களின் பாதிப்பிலிருந்து காப்பார்.  கர்மவினைகளை வேரோடு சாய்ப்பார்.  இவரிடம் வேண்டிய கோரிக்கைகள் மட்டுமல்லாமல் வேண்டாமல் மறந்து போன கோரிக்கைகளும் நிறைவேறும்.  சிவ வழிபாட்டின் இறுதி நிலையே பைரவர் வழிபாடு ஆகும்.  எத்தனையோ பிறவிகளில் புண்ணியம் செய்தவர்கள் மட்டுமே பைரவர் வழிபாடு செய்கின்றனர்.  முதலில் காலபைரவரை வழிபாடு செய்யும் அனைவரும் படிப்படியாக சொர்ணபைரவர் வழிபாடும் செய்வார்கள்.  பின்பு இரண்டு வழிபாடுகளும் தொடர்ந்து செய்வார்கள்.  இறுதியில் சொர்ணபைரவர் வழிபாடு மட்டும் செய்வார்கள்.  இது தான் பைரவர் வழிபாட்டின் ரகசியம் ஆகும்.  தன் கர்ம வினைகளை முற்றிலும் நீக்கி பிறவியில்லா பெருநிலையை அடைய தகுதி படைத்தவர்களே பைரவர் வழிபாட்டை தொடர்ந்து செய்கிறார்கள்.  கர்மவினைகளை அழித்து முக்தியை அடைகிறார்கள்.  பைரவரை வழிபாடு செய்வது மிகவும் எளிது. 

“ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் சொர்ணபைரவாய ஹும் பட் ஸ்வாஹா”

மேற்கண்ட மந்திரம் சொர்ணபைரவரின் சிறப்பான மந்திரம் ஆகும்.  இதற்கு பெரிய கட்டுப்பாடுகள் ஏதும் இல்லை.  அசைவம் ஒன்று மட்டும் சாப்பிடக்கூடாது.  மேற்கண்ட மந்திரத்தை வியாழக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் 21 முறை சிவத்தலத்தில் உள்ள தட்சணாமூர்த்தி சந்நிதியில் செபிக்க வேண்டும்.  (ஆம் தட்சணாமூர்த்தி சந்நிதியில் தான் செபிக்க வேண்டும்).  பின்பு வீடு வந்து இரவு 8 மணிக்கு மேல் 9 மணிக்குள் 108 முறை செபிக்க வேண்டும்.  பின்பு தினமும் 108 முறை அல்லது 54 முறை அல்லது 27 முறை செபிக்க வேண்டும்.    இந்த மந்திரம் சகல தோஷங்களையும், சகல பாவங்களையும் நீக்க வல்லது.  சொர்ணபைரவரின் அருள் கிட்டினால் சகல தோஷங்களும், பாவங்களும் நில்லாது ஓடும்.  இவ்வாறு தொடர்ந்து செபித்து வர நமது கர்மவினைகள் முற்றிலுமாக நீங்கி 16 பேறுகளையும் பெறுவது திண்ணம்.

 

தென்திசை நோக்கும் கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

சந்திரனை சூடிய மற்ற கடவுள்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

மந்திர செபம் செய்ய ஏற்ற இடங்கள் பற்றி தனியாக ஒரு பதிவு வெளிவரும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்