Thursday, January 1, 2015

2015 ம் ஆண்டு வளர்பிறை பிரதோஷம் வரும் நாட்கள்

lor23a

Valarpirai Thrayodhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

2015 ம் ஆண்டு வளர்பிறை துவாதசி திதி வரும் நாட்கள்

annadhaanam

Valarpirai Dwadhasi - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

2015 ம் ஆண்டு கிருத்திகை நட்சத்திரம் வரும் நாட்கள்

murugan with wives

Kiruthigai - 2015

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சரவணபவ

Sunday, March 16, 2014

நந்திகேஸ்வரர் அஷ்டகம்

nandi-gana-big2

 

ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்

 

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்

நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்

 

வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்

துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம்

 

விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்

வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்

 

ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்

பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம்

 

சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்

கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்

 

பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்

நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்

 

சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்

சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்

 

சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்

நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்

 

நாம் மேலே காண்பது நந்திகேஸ்வரர் அஷ்டகம் ஆகும்.  இது இறைவன் சிவபெருமானின் நேரடி சீடரும், வாகனமும் ஆகிய நந்திகேஸ்வரரை போற்றி புகழும் பாடல் ஆகும்.  ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் மேற்கண்ட நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் நந்தியின் அருளோடு சிவபெருமானின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

Thursday, March 13, 2014

நவசக்தியரின் பெயர்களும் - பெருமைகளும்

shri-lalitha-devi1

சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும்.  சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே.  பராசக்தியின் வடிவங்கள் பலப்பல.  ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள்.  அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.

நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-

  1. மனோன்மணி
  2. சர்வபூதமணி
  3. பலப்பிரதமணி
  4. கலவிகரணி
  5. பலவிகரணி
  6. காளி
  7. ரவுத்திரி
  8. சேட்டை
  9. வாமை

நவசக்தியரின் இயல்புகளும், தொழில்களும்:-

வ.எண்

நவசக்தியின் பெயர்

இயல்பு மற்றும் தொழில்

1. மனோன்மணி

பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள்.

2. சர்வபூதமணி

உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள்.

3. பலப்பிரதமணி

சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள்.

4. கலவிகரணி

வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள்.

5. பலவிகரணி

சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள்.

6. காளி

காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

7. ரவுத்திரி

நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள்.

8. சேட்டை

நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள்.

9. வாமை

மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் நவசக்தியே போற்றி…! போற்றி…!! போற்றி…!!!