தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
ஆன்மீகச்சுடர் வலைப்பூ தங்களை அன்புடன் வரவேற்கிறது. உலகெங்கும் வாழும் தமிழ் நெஞ்சங்களின் வாழ்வியல் துயர்கள் களைய குருவருளாலும் இறையருளாலும் இவ்வலைப்பூ நடத்தப்படுகிறது. குருவருளும் திருவருளும் ஆன்மீகச்சுடராக நின்று வழிகாட்டும். தங்களின் மேலான சந்தேகங்களுக்கு / கேள்விகளுக்கு aanmeegachudar@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியை தொடர்பு கொள்ளவும். ஆன்மீகச்சுடர் தற்போது apk வடிவில்...
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
ஸ்ரீ நந்திகேஸ்வரர் அஷ்டகம்
நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர பாஹிமாம்
நந்திகேஸ்வர நந்திகேஸ்வர நந்திகேஸ்வர ரக்ஷமாம்
வேத பாதா ப்ரம்ம ரூபா சிவத்யானா பாஹிமாம்
துங்க சைலா தேவ தேவா சிவப்பிரியா ரக்ஷமாம்
விஷ்ணு ரூபா ப்ருத்வி ரூபா நீதி ஈஸ்வர பாஹிமாம்
வேதா சாரா மந்திர சாரா சாக்ஷாத் காரா ரக்ஷமாம்
ஸோம சூர்யா அக்னி லோசன நந்திகேஸ்வர பாஹிமாம்
பாபஹரணா பர்த்திவாசா சகல லோக ரக்ஷமாம்
சதானந்த சித்ஸ்வரூபா சின்மயேசா பாஹிமாம்
கைலாஸா கனகரூபா பண்டிதாயா ரக்ஷமாம்
பிரதோஷ காலா பரமேஸ்வரா பக்தபாலா பாஹிமாம்
நாடி போதக காலகண்டா கருணாகரா ரக்ஷமாம்
சகல தோஷா சகல பீடா தஹண நாமா பாஹிமாம்
சர்வ சத்ரு சர்வ ரோக நிவாரணா ரக்ஷமாம்
சித்த புருஷா சித்த நாயகா சேவிதாதி பாஹிமாம்
நடன ரூபா நாட்டியப் பிரியா ம்ருதங்க வாத்யா ரக்ஷமாம்
நாம் மேலே காண்பது நந்திகேஸ்வரர் அஷ்டகம் ஆகும். இது இறைவன் சிவபெருமானின் நேரடி சீடரும், வாகனமும் ஆகிய நந்திகேஸ்வரரை போற்றி புகழும் பாடல் ஆகும். ஒவ்வொரு பிரதோஷ காலத்திலும் மேற்கண்ட நந்திகேஸ்வரர் அஷ்டகத்தை பாராயணம் செய்து வந்தால் நந்தியின் அருளோடு சிவபெருமானின் அருளும் ஒருங்கே கிடைக்கும்.
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் சிவ சிவ ஓம்
சக்தி என்ற சொல் பராசக்தியையே குறிக்கும். சிவன் அனைத்து உயிரினங்களின் உடலில் கலந்து நிற்க அந்த உயிரனங்களுக்கு உயிரினை தருபவள் சக்தியே. பராசக்தியின் வடிவங்கள் பலப்பல. ஒவ்வொரு காலத்திலும் ஒவ்வொரு சக்தி வடிவமாக பராசக்தி விளங்குகிறாள். அன்னை பராசக்தியே இந்த உலகத்தின் ஒவ்வொரு அணுவிலும் கலந்து நின்று உலக இயக்கத்தினை உருவாக்குகிறாள்.
நவசக்தியரின் பெயர்கள் பின்வருமாறு:-
நவசக்தியரின் இயல்புகளும், தொழில்களும்:-
| வ.எண் | நவசக்தியின் பெயர் | இயல்பு மற்றும் தொழில் |
| 1. | மனோன்மணி | பாவ புண்ணிய கணக்கிலிருந்து விடுபட்டு பக்குமடைந்த உயிர்களை உலக இன்பங்களிலிருந்து விலக்கி சிவனுடன் சேர்க்கும் வல்லமை கொண்டவள். |
| 2. | சர்வபூதமணி | உலக உயிர்களில் கலந்து நின்று உயிர்களின் பாவம் மற்றும் புண்ணியங்களை நீக்கும் வல்லமை கொண்டவள். |
| 3. | பலப்பிரதமணி | சூரியனிடம் கலந்து நின்று தீயவற்றை அழித்து நன்மையை வளர்த்து ஆக்கம் தரும் வல்லமை கொண்டவள். |
| 4. | கலவிகரணி | வானத்தில் கலந்து நின்று எல்லா பொருட்களையும் தன்பால் ஏற்று தன்னுடன் கலந்து இணைந்து நிற்க அருளும் வல்லமை கொண்டவள். |
| 5. | பலவிகரணி | சந்திரனில் கலந்து நின்று அமுதத்தை பொழிந்து தாவரக்கூட்டங்கள் உயிர் பெற்று தழைத்தோங்கத் துணை நிற்கும் ஆற்றல் கொண்டவள். |
| 6. | காளி | காற்றில் கலந்து நின்று உயிர்களுக்கு பிராண வாயுவை அளித்து உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள். |
| 7. | ரவுத்திரி | நெருப்பில் கலந்து நின்று நெருப்பிற்கு வெம்மையை வழங்கி யாவற்றையும் அழிக்கும் வல்லமை கொண்டவள். |
| 8. | சேட்டை | நீரினில் கலந்து அதற்கு திரவ நிலையையும், சுவையையும் வழங்கி உயிர்களுக்கு நன்மை செய்யும் வல்லமை கொண்டவள். |
| 9. | வாமை | மண்ணில் கலந்து நின்று ஐம்பூதங்களின் செயல்களையும் ஒருங்கே செய்து அருள் பாலிக்கும் வல்லமை கொண்டவள். |
தென்னாடுடைய சிவனே போற்றி…!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!
ஓம் அண்ணாமலையே போற்றி…!!!
ஓம் நவசக்தியே போற்றி…! போற்றி…!! போற்றி…!!!