Sunday, September 8, 2013

சிவ பஞ்சாட்சர தோத்திரம் - தமிழில்




சிவபெருமானின் பஞ்சாட்சரமான “நமசிவய” என்னும் மந்திரத்தின் ஒவ்வொரு எழுத்திலும் ஒரு சுலோகம் உள்ளது.  ஐந்தெழுத்து மந்திரத்ததை வேண்டிய அளவு செபம் செய்த பின்பு சிவ பஞ்சாட்சர தோத்திரத்தை பாராயணம் செய்தால் தான் முழுபலனும் கிட்டும்.


அரவினை அணியாய்க் கொண்டான் அரனெனும் மகேசுவரதன் தான்
விபூதியை தரித்த மேனி விளங்குவோன் நித்தன் சுத்தம்
அபேதமும் பேதம் ஆன அரிய திகம் பரனை யந்த
நகாரமாய் உருக்கொள் வோனை நலமுறத் துதிக்கின்றேனே.

கங்கையிற் கலந்த சாந்தம் களபமாய்ப் பூசுவார்காண்
நந்தியுள்ள  ளிட்டோரான நற்கணநாதன் ஆனான்
மந்தாரை மலரின் பூஜை மல்கிடும் மகேச னான
மகாரமாய் உருக் கொள் வோனை மனங்கொளத் துதிக்கின்றேனே. 

தக்கனின் யாகம் தன்னைத் தகர்த்து  தாட்சாயனியின்
மிக்கதோர் வதன காந்தி அவித்தவன் நீல கண்டன்
தொக்கமா விடைக் கொடிகொள் தூயனை அரனை அந்தச்
சிகாரமாய் உருக் கொள் வோனைச் சிவனையாள் துதிக்கின்றேனே. 

வசிட்ட கதத்திய ரோடு வல்லவர் கௌதமர் போல்
தவத்தினில் சிறந்தோர் தேவர் தாமுறை தொழு வாழ்த்தும்
சந்திர சூர்யாக் னியாமெனும் சார்முக் கண்ணன் தன்னை
வகாரமாய் உருக்கொள் வோனை வள்ளலைத் துதிக்கின்றேனே. 

யட்ச சொரூபம் கொண்ட யாக செஞ் சடையைக் கொண்ட 
கட்க பிணாக ஹஸ்தக் கடவுளை அழிவற்றோரை
தொக்க மங்களங்கள் யாவும் தொடர்திகம் பரராம் துய்ய
யகாரமாய் உருக்கொள் வோனை யாண்டுமே துதிக்கின்றேனே.

--- ஆதி சங்கரர்


தினமும் விடியற் காலையில் இந்த தோத்திரத்தை பாராயணம் செய்து வந்தால் தெய்வ அருள் கிட்டும்.  சிவலிங்கம் வைத்து பாராயணம் செய்து வந்தால் எல்லா பேறுகளும் கிட்டும்.  சிவபெருமானே நேரில் தோன்றுவார்.  தோத்திரங்களில் மிக சக்தி வாய்ந்தது இந்த தோத்திரமே ஆகும்.


தென்னாடுடைய சிவனே போற்றி...!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி...!!

ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment