Monday, September 23, 2013

எதிர்ப்புகள், எதிரி, ஏவல், பில்லி, சூனியம் போக்கும் குமாரஸ்தவம்

  
  
(கையடக்க வடிவம்)
   
(கையடக்க வடிவம்)
 
(பெரியது)



              1.    ஓம் ஷண்முக பதயே நமோ நம :

              2.    ஓம் ஷண்மத பதயே நமோ நம :

              3.    ஓம் ஷட்க்ரீவ பதயே நமோ நம :

              4.    ஓம் ஷட்க்ரீட பதயே நமோ நம :

              5.    ஓம் ஷட்கோண பதயே நமோ நம :

              6.    ஓம் ஷட்கோச பதயே நமோ நம :

              7.    ஓம் நவநிதி  பதயே நமோ நம :

              8.    ஓம் சுபநிதி  பதயே நமோ நம :

              9.    ஓம் நரபதி பதயே நமோ நம :

             10.   ஓம் சுரபதி பதயே நமோ நம :

             11.   ஓம் நடச்சிவ பதயே நமோ நம :

             12.   ஓம் ஷடஷர பதயே நமோ நம :

             13.   ஓம் கவிராஜ பதயே நமோ நம :

             14.   ஓம் தபராஜ பதயே நமோ நம :

             15.   ஓம் இகபர பதயே நமோ நம :

             16.   ஓம் புகழ்முநி பதயே நமோ நம :

             17.   ஓம் ஜயஜய பதயே நமோ நம :

             18.   ஓம் நயநய பதயே நமோ நம :

             19.   ஓம் மஞ்சுள பதயே நமோ நம :

             20.   ஓம் குஞ்சரி பதயே நமோ நம :

             21.   ஓம் வல்லீ பதயே நமோ நம :

             22.   ஓம் மல்ல பதயே நமோ நம :

             23.   ஓம் அஸ்த்ர பதயே நமோ நம :

             24.   ஓம் சஸ்த்ர பதயே நமோ நம :

             25.   ஓம் ஷஷ்டி பதயே நமோ நம :

             26.   ஓம் இஷ்டி பதயே நமோ நம :

             27.   ஓம் அபேத பதயே நமோ நம :

             28.   ஓம் சுபோத பதயே நமோ நம :

             29.   ஓம் வியூஹ பதயே நமோ நம :

             30.   ஓம் மயூர பதயே நமோ நம :

             31.   ஓம் பூத பதயே நமோ நம :

             32.   ஓம் வேத பதயே நமோ நம :

             33.   ஓம் புராண பதயே நமோ நம :

             34.   ஓம் ப்ராண பதயே நமோ நம :

             35.   ஓம் பக்த பதயே நமோ நம :

             36.   ஓம் முக்த பதயே நமோ நம :

             37.   ஓம் அகார பதயே நமோ நம :

             38.   ஓம் உகார பதயே நமோ நம :

             39.   ஓம் மகார பதயே நமோ நம :

             40.   ஓம் விகாச பதயே நமோ நம :

             41.   ஓம் ஆதி பதயே நமோ நம :

             42.   ஓம் பூதி பதயே நமோ நம :

             43.   ஓம் அமார பதயே நமோ நம :

             44.   ஓம் குமார பதயே நமோ நம :


நீங்கள் மேலே  காண்பது   பாம்பன் சுவாமிகள் அருளிய குமாரஸ்தவம் ஆகும்.  இதை  நீங்கள் முன்னரே பார்த்தும் படித்தும்  இருக்கலாம்.   ஆனால்  இதன் அருமை பெருமைகளை அறிந்தவர்கள் வெகு சிலர் மட்டுமே.


இந்த துதி முருகப்பெருமானின் அருளை வேண்டி பாடப் பெற்றதாகும்.  இது கந்தபுராணத்தின் சுருக்கம் ஆகும்.  மொத்தம் 44 வரிகளை உடையது.  இதனை படிக்கும் போது நம :” என்ற சொல்லை நமஹ்என்று உச்சரிக்கவும்.


அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, மேற்கண்ட துதியை தினமும் பாராயணம் செய்து வரவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் 1 முறை பாராயணம் செய்யவும்.  முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 1 முறை பாராயணம் செய்யவும்.


பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ 8 முறை பாராயணம் செய்யவும்.  அதன் பின்பு தினமும் 1 முறை பாராயணம் செய்து வரவும்.  முருகனின் படம் அல்லது சிலை இல்லாத நிலையில் பித்தளையில் ஒரு வேல் வாங்கிக் கொள்ளவும்.  அதனை முருகனாக பாவித்து மேற்கண்ட துதியை பாராயணம் செய்யவும்.


நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது.  ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம்.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று.  அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.


ஐந்து எண்ணெய் ஊற்றி தாமரை தண்டு நூல் போட்டு இரண்டு தீபங்கள் ஏற்றி பாராயணம் செய்யவும்.  மந்திர சக்தி உண்டாகும்.  பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  எங்கு சென்றாலும் பூசை செய்த வேலை கூடவே எடுத்து செல்லாம்.  முருகன் அருள் கூடவே வந்து நிற்கும்.  இதைப் பற்றிய பாடல் ஒன்று இதோ.


அஞ்சு முகம் தோன்றின் ஆறுமுகம் தோன்றும்
வெஞ்சமரில் அஞ்சலென வேல் தோன்றும்; நெஞ்சில்
ஒருகால் நினைக்கில் இருகாலுந் தோன்றும்
முருகா வேன்றோது வார்முன்.
 

சிவனருள் கிடைத்தால் முருகனருள் தானகவே வந்து சேரும்.  மிகப்பெரும் போர்க்களத்தில் அஞ்ச வேண்டாம் என வேல் துணையாக நிற்கும்.  மனதில் முருகா என்று இப்பிறவியில் ஒரு முறை நினைத்தாலே மறுபிறவிக்கும் வேல் முருகனருளாக வந்து நிற்கும் என்பதே இதன் பொருளாகும்.


தினமும் 1 முறை பாராயணம் செய்யவும்.  எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.
 


ஓம் சரவணபவ

ஓம் சிவ சிவ ஓம்


No comments:

Post a Comment