நாம் மேலே காண்பது பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம் ஆகும்.  இது மிகவும் சக்தி வாய்ந்த ஒரு கவசம் ஆகும்.  இது மொத்தம் 30 பாடல்களை உடையது.   உயிரெழுத்து வரிசை (12) மற்றும்  உயிர்மெய் வரிசை (18) ஆக மொத்தம் 30 பாடல்களைக் கொண்டது.
அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு, பித்தளையில் இரண்டு வேல்கள் வாங்கி பூசையறையில் வைத்துக் கொள்ளவும்.  முதன் முதலில் ஆரம்பிக்கும் போது செவ்வாய் கிழமை அல்லது கிருத்திகை நட்சத்திரம் அல்லது விசாக நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி அன்று வீட்டிற்கு அருகில் உள்ள முருகன் தலத்தில் கணவன் – மனைவி இருவரும் ஒன்றாக அமர்ந்து 3 முறை பாராயணம் செய்யவும். முருகன் தலம் இல்லாவிடில் சிவத்தலத்தில் உள்ள முருகன் சந்நிதியில் 3 முறை பாராயணம் செய்யவும்.  
பின்பு வீட்டில் வந்து முருகனின் படம் முன்போ அல்லது சிலை முன்போ அமர்ந்து ஒரு பித்தளை தட்டில் பச்சரிசி பரப்பி வாங்கி வைத்துள்ள இரண்டு வேல்களையும் வைத்து அதன் முன்னர் கணவன் – மனைவி இருவரும் 3 முறை பாராயணம் செய்யவும். அதன் பின்பு தினமும் 3 முறை பாராயணம் செய்து வரவும். 108 நாட்கள் தினமும் 3 முறை கணவன் – மனைவி இருவரும் அமர்ந்து பாராயணம் செய்து வரவும். 
நீங்கள் வாங்கும் வேல் உங்களின் கட்டைவிரலின் உயரத்தை விட 21 மடங்கிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒரு சாண் அளவை விட குறைவாக இருப்பது நலம். வேலின் உயரம் 6 அங்குலம் இருப்பது மிக சிறப்பு.  அதனை தினமும் கழுவி விபூதி, சந்தனம் மற்றும் குங்குமம் வைத்து வணங்கி வருதல் நன்று. அவ்வாறு தினமும் அபிசேகம் செய்ய இயலவில்லை என்றாலும் பரவாயில்லை.  
இரண்டு குத்து விளக்குகளில் மூன்று முகங்கள் மட்டும் தீபம் ஏற்ற வேண்டும்.  பருத்தி பஞ்சுத்திரி கிழக்கு முகமாகவும், சிவப்புத்துணி திரி மேற்கு முகமாகவும், வாழைத்தண்டு திரி வடக்கு முகமாகவும் வைத்து குத்து விளக்குகளை ஏற்ற வேண்டும்.  ஐந்து எண்ணெய் ஊற்றி இரண்டு குத்து விளக்குகள் ஏற்றி பாராயணம் செய்யவும். மந்திர சக்தி உண்டாகும். பாராயணம் வெகு விரைவில் பலனளிக்கும்.  108 நாட்கள் கழித்து ஒரு வேலை அருகிலுள்ள முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும்.  இரண்டாவது வேலை குழந்தை பிறந்த பிறகு 40 நாட்கள் தீட்டு கழிந்து பழநி அல்லது திருச்செந்தூர் முருகன் தலத்தில் காணிக்கையாக செலுத்தி விடவும். 
மேற்கண்ட முறை மிகவும் சக்தி வாய்ந்தது.  நிச்சயம் பலனளிக்கும்.  ஆண் – பெண் ஜாதகத்தில் உள்ள எவ்வித கடுமையான புத்திரதோஷத்தையும் நீக்க வல்லது.  வேறு எந்த பரிகாரமும் தேவையில்லை.  தினமும் 3 முறை பாராயணம் செய்யவும். எதிர்ப்புகள், அனைத்து வித எதிரிகள், ஏவல், பில்லி, சூனியம் போன்ற வஞ்சனைகள் இவற்றை அழித்து புத்திரதோஷத்தை நீக்கி நன்மக்கட்டிபேறினை அளித்து என்றும் நிம்மதியாக வாழ முருகனருள் என்றும் துணை நிற்கும் என்பதில் ஐயமில்லை.  
ஓம் சரவணபவ
ஓம் சிவ சிவ ஓம்
  
ஓம் குமர குருதாச குருப்யோ நம:



No comments:
Post a Comment