Sunday, November 24, 2013

சிவனடியார்களின் இலக்கணங்கள்

Nalvar

63 Nayanmar

அகத்திலக்கணங்கள்:-

  1. திருநீறு அணிதல்
  2. ருத்ராட்சம் அணிதல்
  3. தாய், தந்தை, குரு மற்றும் பெரியோர்களை வணங்குதல்
  4. தேவார திருமுறைகளை அன்புடன் ஓதுதல்
  5. மூன்று வேளையும் (காலை, மாலை மற்றும் இரவு) ஐந்தெழுத்தை செபித்தல்
  6. சிவ பூசை செய்தல்
  7. சிவ பூசை செய்வதற்கு உதவுதல்
  8. சிவ புண்ணியங்களை செய்தல்
  9. சிவ புண்ணியங்களை செய்வித்தல்
  10. சிவபெருமானின் புகழை கூறும் நூல்களை ஓதுதல் மற்றும் கேட்டல்
  11. சிவாலய வழிபாடு செய்தல்
  12. சிவாலய திருப்பணி செய்தல்
  13. சிவனடியார்க்கு உதவி செய்தல்
  14. சிவனடியார்களிடத்தில் மட்டுமே உண்ணுதல்

புறத்திலக்கணங்கள்:-

சிவபெருமானின் புகழைக் கேட்கும் சமயத்திலோ அல்லது சிவபெருமானை நினைக்கும் சமயத்தில்

  1. நாதழுதழுத்தல்
  2. மிடறு விம்முதல்
  3. உதடுகள் துடித்தல்
  4. உடல் குலுங்குதல்
  5. மெய் சிலிர்த்தல்
  6. வியர்த்தல்
  7. சொல் எழாதிருத்தல்
  8. கண்ணீர் அரும்புதல்
  9. வாய்விட்டழுதல்
  10. மெய் மறத்தல்

சிவனடியார்கள் மேற்கண்ட அக மற்றும் புற இலக்கணங்கள் மட்டுமல்லாமல் அன்பு, அமைதி, கருணை, இன்சொல், நற்செய்கை, பொதுநலம் உடையவர்களாக இருத்தல் வேண்டும்.

சுயநலம், பேராசை, பொய், களவு, வஞ்சம் இவற்றை ஒழிக்க வேண்டும்.

 

தென்னாடுடைய சிவனே போற்றி…!

எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி…!!

ஓம் அண்ணாமலையே போற்றி…!!!

ஓம் சிவ சிவ ஓம்

 

No comments:

Post a Comment