Tuesday, September 3, 2013

சொர்ண பைரவர் போற்றி - 33




  
1.   ஓம் ஸ்ரீம் தனவயிரவா போற்றி

2.   ஓம் ஸ்ரீம் தத்துவ தேவா போற்றி

3.   ஓம் ஸ்ரீம் தயாளா போற்றி

4.   ஓம் ஸ்ரீம் தனநாதா போற்றி

5.   ஓம் ஸ்ரீம் தனத்தேவா போற்றி

6.   ஓம் ஸ்ரீம் குலதேவா போற்றி

7.   ஓம் ஸ்ரீம் குருநாதா போற்றி

8.   ஓம் ஸ்ரீம் குண்டலினி தேவா போற்றி

9.   ஓம் ஸ்ரீம் குபேரா போற்றி

10. ஓம் ஸ்ரீம் குணக்குன்றே போற்றி

11. ஓம் ஸ்ரீம் வயிரவா போற்றி

12. ஓம் ஸ்ரீம் வளந்தருவாய் போற்றி

13. ஓம் ஸ்ரீம் வற்றாத தனமே போற்றி

14. ஓம் ஸ்ரீம் வனத்துறை வாழ்வே போற்றி

15. ஓம் ஸ்ரீம் திருவுடைச் செல்வா போற்றி

16. ஓம் ஸ்ரீம் தினந்தினங்காப்பாய் போற்றி

17. ஓம் ஸ்ரீம் திருமண தேவா போற்றி

18. ஓம் ஸ்ரீம் திருவருள்திரண்டாய் போற்றி

19. ஓம் ஸ்ரீம் திருவடி காட்டுவாய் போற்றி

20. ஓம் ஸ்ரீம் சித்தர்கள் வாழ்வே போற்றி

21. ஓம் ஸ்ரீம் சித்தருக்குச் சித்தா போற்றி

22. ஓம் ஸ்ரீம் சித்திகள் எட்டே போற்றி

23. ஓம் ஸ்ரீம் சித்தாந்த வடிவே போற்றி

24. ஓம் ஸ்ரீம் சித்திகள் முடித்தாய் போற்றி

25. ஓம் ஸ்ரீம் முழுநிலவானாய் போற்றி

26. ஓம் ஸ்ரீம் முனிவர்கள் மருந்தே போற்றி

27. ஓம் ஸ்ரீம் முழு தனம் தருவாய் போற்றி

28. ஓம் ஸ்ரீம் முடியாதன முடிப்பாய் போற்றி

29. ஓம் ஸ்ரீம் முகிழ் நகை வயிரவா போற்றி

30. ஓம் ஸ்ரீம் இரும்பைப் பொன்னாக்கினாய் போற்றி

31. ஓம் ஸ்ரீம் இருந்தருள் செய்ய வந்தாய் போற்றி

32. ஓம் ஸ்ரீம் இலுப்பைக்குடி வயிரவா போற்றி
 

33. ஓம் ஸ்ரீம் சொர்ண வயிரவா போற்றி போற்றி போற்றி.

ஆக்கம்: உபாசனா குலபதி துர்க்கை சித்தர்

அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாக நிறுத்திவிட்டு மேற்கண்ட போற்றி பாடலை தினமும் பாராயணம் செய்து வர கர்ம வினைகள் நீங்கி 16 பேறுகளையும் பெறுவர் என்பது திண்ணம்.

இதை முதலில் ஆரம்பிக்கும் போது தேய்பிறை அஷ்டமி அன்று பைரவர் சந்நிதியில் பாராயணம் செய்து பின்பு வீட்டில் பாராயணம் செய்யவும்.

கோவிலுக்கு செல்ல இயலாவிடில் பூசையறையின் தெற்கு சுவரில் சந்தனத்தில் சூலம் வரைந்து அதனையே பைரவராக பாவித்து இரண்டு நெய்விளக்கு, வெற்றிலை, கொட்டைப்பாக்கு, ஊதுபத்தி, அவல் பாயசம் வைத்து பாராயணம் செய்து வரவும்.

ஆறு மாதங்களில் நல்ல பலன் தெரியும்.  எல்லா வகை பிரச்சனைகளும் ஒழியும்.

  ஓம் சிவ சிவ ஓம்

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ


No comments:

Post a Comment